Prøve GULL - Gratis

பிரிந்த கணவன் மீண்டும் அழைக்கிறார் தவிக்கும் மனைவி!

Dinakaran Nagercoil

|

May 11, 2025

அன்புள்ள டாக்டர், நான் 38 வயது பெண். எனக்கு 26 வயதில் திருமணமானது. அடுத்த இரு ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் ஒரு மகன், ஒரு மகள் என வாய்த்தனர். என் கணவர் சுயமாகத் தொழில் செய்து வருகிறார். என் அண்ணன்கள் மூவர், அப்பா என எங்கள் குடும்பத்தில் எல்லோருமே சுயதொழில்தான்.

என் கணவர் என் மீது அன்பாகவே இருந்தார். ஆனால், விதி கொடூரமாக என் வாழ்வில் விளையாடியது. எனக்கு என் மகள் பிறந்த அடுத்த வருடமே கழுத்து பெரிதாக வீங்கத் தொடங்கியது. என்னவென்று போய் பரிசோதித்துப் பார்த்த போது, தைராய்டு புற்றுநோய் என்றார்கள். என் உலகமே இருண்டுவிட்டது.

என் கணவர் ரிசல்ட் வந்ததில் இருந்தே என்னிடம் சரிவரப் பேசாமல் முகம் இருண்டுபோய் அமைதியாக இருந்தார். நானும் அவர் அப்செட்டாக இருக்கிறார் என்று நினைத்து அமைதியாக வீட்டுக்கு வந்தேன். என் மாமியாரிடம் என் கணவரேதான் விஷயத்தைச் சொன்னார். குழந்தைகளுக்கு இப்போதைக்குத் தெரிய வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், என் மாமியார் சொல்லிவிட்டார்.

அவர்களுக்குப் புரியாவிட்டாலும் அம்மாவுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என்று நினைத்து எனக்கு ஆறுதல் சொன்னார்கள். நான் வெடித்து அழுதேன். அப்போது முதலே என் மாமியாரின் சுடுசொல் என்னை வாட்டத் தொடங்கியது. கேன்சர் இருக்கும் பெண்ணை ஏமாற்றிக் கட்டி வைத்து, என் மகன் வாழ்வை நாசமாக்கிவிட்டார்கள் என்றெல்லாம் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார்.

எனக்கு ஆறுதலாக இருப்பார் என்று நினைத்த என் கணவரோ என் அண்ணன்களிடமும் அப்பாவிடமும் சண்டையிட்டார். ஒரு நோயாளியை எனக்கு திருமணம் செய்துவைத்துவிட்டீர்கள். இந்தக் குழந்தைகளை இனி எப்படிப் பார்த்துக்கொள்வேன். ஒருவேளை எதிர்காலத்தில் இவர்களுக்கும் இந்த நோய் வந்தால் என் சந்ததியே இல்லாமல் போய்விடுமே. என்னை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே என்று சத்தமிட்டார்.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே

கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், 'இராக்கதன்'. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜு, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் 'மகாசேனா' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நெல்லை அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை

நெல்லை கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (27). முத்தமிழ் (4), சுசிலா தேவி (3) என இரண்டு மகள்கள் இருந்தனர்.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் மதுரை, வேலூர் அரசு சட்டக்கல்லூரிகளில் கட்டிடம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

October 14, 2025

Dinakaran Nagercoil

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து

தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் சென்னை விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

விஐடி சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவர் ஜி.வி. செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

அமைச்சர் சிவசங்கரன் தகவல்

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size