Prøve GULL - Gratis

ரூ.517 கோடி செலவில் 90 முடிவுற்ற பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

DINACHEITHI - KOVAI

|

June 27, 2025

60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்றுமுன்தினம் (25.6.2025) சென்னை, சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காட்பாடி இரயில் நிலையத்தில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

பின்னர், வேலூர் மாவட்டம், பூதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் (26.6.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு

தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் மட்டும் இன்றிதேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - KOVAI

ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - KOVAI

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் 108-வது பிறந்தநாளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம்:முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-

time to read

1 min

September 15, 2025

DINACHEITHI - KOVAI

இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா : சிலைக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 15.9.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்துமலர் தூவிமரியாதை செலுத்துகிறார்கள்.

time to read

1 mins

September 15, 2025

DINACHEITHI - KOVAI

தமிழகத்தில் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time to read

1 min

September 14, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது “ என்று, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

time to read

1 mins

September 14, 2025

DINACHEITHI - KOVAI

‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

time to read

1 min

September 12, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்

தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு :-

time to read

1 min

September 12, 2025

DINACHEITHI - KOVAI

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் 2002 மற்றும் 2004-க்கு இடையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

September 11, 2025

Translate

Share

-
+

Change font size