Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

ரூ.517 கோடி செலவில் 90 முடிவுற்ற பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

DINACHEITHI - KOVAI

|

June 27, 2025

60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்றுமுன்தினம் (25.6.2025) சென்னை, சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காட்பாடி இரயில் நிலையத்தில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

பின்னர், வேலூர் மாவட்டம், பூதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் (26.6.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார்.

DINACHEITHI - KOVAI からのその他のストーリー

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மதுரை, கோவையிலும் மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம்

திட்டத்துக்கு மத்திய அரசுமறுப்பு :

time to read

1 min

November 20, 2025

DINACHEITHI - KOVAI

கோவை விழாவில் பிரதமர் மோடி பேச்சு

ரசாயனம் இல்லாத விவசாயத்தை மேற்கொள்ளுங்கள்

time to read

1 mins

November 20, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பீகார் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

time to read

1 min

November 20, 2025

DINACHEITHI - KOVAI

பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்

புதுடெல்லி,நவ.20சொந்தமாக விவசாய நிலம் பிஎம் கிசான் நிதி வைத்துள்ள விவசாயக் திட்டத்தை மத்திய அரசு குடும்பங்களுக்கு உதவித் 2019ம் ஆண்டு தொடங்கியது. தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டப்படி, 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 20 தவணைகளாக வங்கி கணக்கு மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 20, 2025

DINACHEITHI - KOVAI

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்: தமிழ் நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

time to read

1 min

November 19, 2025

DINACHEITHI - KOVAI

பிரதமர் மோடியுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச வாய்ப்பு

time to read

1 min

November 19, 2025

DINACHEITHI - KOVAI

பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இன்று தேர்ந்து எடுக்கப்படுகிறார்

20-ந் தேதி பதவி ஏற்கிறார்

time to read

1 min

November 19, 2025

DINACHEITHI - KOVAI

சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நவம்பர் 30 -ம் தேதி வரை நீடிப்பு

தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு

time to read

1 mins

November 17, 2025

DINACHEITHI - KOVAI

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - KOVAI

அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

time to read

1 min

November 16, 2025

Translate

Share

-
+

Change font size