Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

DINACHEITHI - DHARMAPURI

|

May 29, 2025

சென்னை மே 29மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் "அலைகள்" திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.05.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 426 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளி பெருமக்களுக்கு 10 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகம் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்

புதுடெல்லி,நவ.20சொந்தமாக விவசாய நிலம் பிஎம் கிசான் நிதி வைத்துள்ள விவசாயக் திட்டத்தை மத்திய அரசு குடும்பங்களுக்கு உதவித் 2019ம் ஆண்டு தொடங்கியது. தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டப்படி, 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 20 தவணைகளாக வங்கி கணக்கு மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

மதுரை, கோவையிலும் மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம்

திட்டத்துக்கு மத்திய அரசுமறுப்பு :

time to read

1 min

November 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோவை விழாவில் பிரதமர் மோடி பேச்சு

ரசாயனம் இல்லாத விவசாயத்தை மேற்கொள்ளுங்கள்

time to read

1 mins

November 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பீகார் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

time to read

1 min

November 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்: தமிழ் நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

time to read

1 min

November 19, 2025

DINACHEITHI - DHARMAPURI

பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இன்று தேர்ந்து எடுக்கப்படுகிறார்

20-ந் தேதி பதவி ஏற்கிறார்

time to read

1 min

November 19, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடியுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச வாய்ப்பு

time to read

1 min

November 19, 2025

DINACHEITHI - DHARMAPURI

“எங்களிடம் ஒப்படையுங்கள்” என்று மத்திய அரசுக்கு வங்க தேச அரசு கோரிக்கை

வங்காளதேச வன்முறையில் 1,000 பேர் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மத்திய அரசின் பாதுகாப்பில் இருக்கும் ஷேக் ஹசினாவை எங்களிடம் ஒப்படையுங்கள். என்று டெல்லி அரசுக்கு வங்காள தேச அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

time to read

1 min

November 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நவம்பர் 30 -ம் தேதி வரை நீடிப்பு

தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு

time to read

1 mins

November 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

time to read

2 mins

November 16, 2025

Translate

Share

-
+

Change font size