Prøve GULL - Gratis
Budget 2025 ஆச்சரியமும் ஏமாற்றமும்!
Nakkheeran
|February 05-07, 2025
மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற மோடியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி 11 மணியளவில் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக 8-வது முறையாகத் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்யும் பட்ஜெட் இது.
இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பங்குச் சந்தை சரிவு, ஜி.டி.பி. விகிதம் நடப்பாண்டில் 6.4 ஆகச் சரிந்த சூழல் போன்றவற்றால், மிகவும் எதிர்பார்ப்புமிக்க பட்ஜெட்டாக இது திகழ்ந்தது. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை பொருளாதார அறிஞர்கள் பட்ஜெட்டில் எதிர்பார்த்திது. ஒரு நிதியாண்டில் எவ்வகையில் வருவாய் ஆதாரங்களைத் திரட்டப் போகிறோம், அதை எவ்விதத்தில் செலவிடப் போகிறோம் என்ற திட்டமே பட்ஜெட்டாகும். இவ்வாண்டு வரி மற்றும் வருவாய்க்கும் செலவுக்குமான வித்தியாசம் இந்தியாவின் இவ்வாண்டு ஜி.எஸ்.டி.யில் 4.8% இருக்குமென மதிப்பிட்டார் நிதியமைச்சர், பற்றாக்குறையைச் சரிக்கட்ட 11.54 லட்சம் கோடி கடன் பெற திட்டமிருப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய பட்ஜெட் இளைஞர், பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டது என தெரிவித்தார். வேளாண் உற்பத்தி பெருக்கம், விவசாயிகள் நிலையை மேம்படுத்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வருமான வரி விதிப்பு எளிமைப்படுத்தப்படுமென்ற நிதியமைச்சர், வருமான வரி தொடர்பான புதிய மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார். புதிய வருமான வரித் திட்டத்தின்கீழ் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரிப்பிடித்தம் கிடையாதென அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை மீதான டி.டி.எஸ். பிடித்தம் 2.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
விவசாயிகளை மகிழ்விக்க, 1.70 கோடி விவசாயிகள் பயன்பெற 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டம், பருப்பு உற்பத்தியை அதிகரிக்க திட்டம், அதிக விளைச்சல் தரும் பருத்தி விதைகளை உற்பத்தி செய்ய திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான கிரெடிட் கார்டு கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் பெறும் கடனுக்கான வட்டி மானியம் ரூ.3000 லிருந்து 5000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மோடி ஆட்சிக்கு வந்தது முதலே, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு காப்பீடு, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு பட்ஜெட்டில் விடையில்லை.
Denne historien er fra February 05-07, 2025-utgaven av Nakkheeran.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Nakkheeran
Nakkheeran
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
குமுறும் பெண்கள்!
3 mins
November 19-21, 2025
Nakkheeran
தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!
“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”
5 mins
November 19-21, 2025
Nakkheeran
கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!
\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
காணாமல் போன அ.தி.மு.க.!
புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
தலைமறைவான சில்மிச டாக்டர்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
கைதி எண் 9658
ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!
அதிர்ச்சியில் விஜய்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.
2 mins
November 19-21, 2025
Translate
Change font size
