Budget 2025 ஆச்சரியமும் ஏமாற்றமும்!
Nakkheeran
|February 05-07, 2025
மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற மோடியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி 11 மணியளவில் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக 8-வது முறையாகத் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்யும் பட்ஜெட் இது.
இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பங்குச் சந்தை சரிவு, ஜி.டி.பி. விகிதம் நடப்பாண்டில் 6.4 ஆகச் சரிந்த சூழல் போன்றவற்றால், மிகவும் எதிர்பார்ப்புமிக்க பட்ஜெட்டாக இது திகழ்ந்தது. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை பொருளாதார அறிஞர்கள் பட்ஜெட்டில் எதிர்பார்த்திது. ஒரு நிதியாண்டில் எவ்வகையில் வருவாய் ஆதாரங்களைத் திரட்டப் போகிறோம், அதை எவ்விதத்தில் செலவிடப் போகிறோம் என்ற திட்டமே பட்ஜெட்டாகும். இவ்வாண்டு வரி மற்றும் வருவாய்க்கும் செலவுக்குமான வித்தியாசம் இந்தியாவின் இவ்வாண்டு ஜி.எஸ்.டி.யில் 4.8% இருக்குமென மதிப்பிட்டார் நிதியமைச்சர், பற்றாக்குறையைச் சரிக்கட்ட 11.54 லட்சம் கோடி கடன் பெற திட்டமிருப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய பட்ஜெட் இளைஞர், பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டது என தெரிவித்தார். வேளாண் உற்பத்தி பெருக்கம், விவசாயிகள் நிலையை மேம்படுத்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வருமான வரி விதிப்பு எளிமைப்படுத்தப்படுமென்ற நிதியமைச்சர், வருமான வரி தொடர்பான புதிய மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார். புதிய வருமான வரித் திட்டத்தின்கீழ் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரிப்பிடித்தம் கிடையாதென அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை மீதான டி.டி.எஸ். பிடித்தம் 2.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
விவசாயிகளை மகிழ்விக்க, 1.70 கோடி விவசாயிகள் பயன்பெற 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டம், பருப்பு உற்பத்தியை அதிகரிக்க திட்டம், அதிக விளைச்சல் தரும் பருத்தி விதைகளை உற்பத்தி செய்ய திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான கிரெடிட் கார்டு கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் பெறும் கடனுக்கான வட்டி மானியம் ரூ.3000 லிருந்து 5000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மோடி ஆட்சிக்கு வந்தது முதலே, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு காப்பீடு, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு பட்ஜெட்டில் விடையில்லை.
यह कहानी Nakkheeran के February 05-07, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Nakkheeran से और कहानियाँ
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size

