Newspaper
Dinamani Namakkal
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
December 03, 2025
Dinamani Namakkal
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 min |
December 03, 2025
Dinamani Namakkal
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min |
December 02, 2025
Dinamani Namakkal
இலங்கையில் சிக்கிய இந்தியப் பயணிகள் அனைவரும் மீட்பு
டித்வா புயலால் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.
1 min |
December 02, 2025
Dinamani Namakkal
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
December 02, 2025
Dinamani Namakkal
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min |
December 02, 2025
Dinamani Namakkal
எண்ம கைது மோசடி வழக்குகள்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது தில்லி, டிச.1: நாடு முழுவதுமான எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) மோசடி வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க சிபிஐ திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
December 02, 2025
Dinamani Namakkal
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 min |
December 02, 2025
Dinamani Namakkal
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 min |
December 02, 2025
Dinamani Namakkal
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min |
December 01, 2025
Dinamani Namakkal
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min |
December 01, 2025
Dinamani Namakkal
ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா
பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
1 min |
December 01, 2025
Dinamani Namakkal
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா: கோலி அசத்தல் சதம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர் விராட் கோலி தனது 49-ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
1 min |
December 01, 2025
Dinamani Namakkal
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 min |
December 01, 2025
Dinamani Namakkal
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min |
December 01, 2025
Dinamani Namakkal
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min |
December 01, 2025
Dinamani Namakkal
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min |
December 01, 2025
Dinamani Namakkal
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 min |
December 01, 2025
Dinamani Namakkal
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min |
December 01, 2025
Dinamani Namakkal
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 min |
December 01, 2025
Dinamani Namakkal
தஞ்சாவூரில் 11,250 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் ஏறத்தாழ 11 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் மூழ்கின.
1 min |
November 30, 2025
Dinamani Namakkal
கூடைப்பந்து: சவூதி அரேபியாவை இன்று சந்திக்கிறது இந்தியா
எஃப்ஐபிஏ உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா-இந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
1 min |
November 30, 2025
Dinamani Namakkal
அரசுப் பள்ளிகளில் டி.5-இல் எஸ்எம்சி கூட்டம்
தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வரும் டிச.5-ஆம் தேதி நடைபெற வுள்ளது.
1 min |
November 30, 2025
Dinamani Namakkal
ஏமாந்த சோணகிரி ஈசர்
திருவண்ணாமலைக்கு சோணகிரி என்ற ஒரு சிறப்புப் பெயர் உண்டு. சோணம் என்றால் செம்மை நிறம், கிரி என்றால் மலை. சோணகிரி என்றால் செம்மையான நெருப்புப் பிழம்பாய் ஒரு காலத்தில் புராணப்படி அயனுக்கும் அரிக்கும் நடுவே சிவபெருமான் மலையாய் நின்றதால் அப்பெயர் சிறப்பாய் அமைந்தது.
1 min |
November 30, 2025
Dinamani Namakkal
அன்றோ மலை; இன்றோ வனம்..!
தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள குக்கிராமமான பாலாபுரத்தில் மலைப் பாங்கான இடத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளை அணுகினோம். அவர்கள் உடனுக்குடன் திட்டங்களைச் செயல்படுத்த ஆவண செய்ததால், 30 தடுப்பணைகளைக் கட்டினோம். மரக்கன்றுகளை நட்டு வனப் பகுதியாக மேம்படுத்தினோம். கிராம மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் முழு ஈடுபாட்டுடன் இந்தப் பணியில் செயல்பட்டனர்” என்கிறார் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் உள்ள பாலாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தென்னரசு.
1 min |
November 30, 2025
Dinamani Namakkal
ஐஷர் மோட்டார்ஸ் நிகர லாபம் 20% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஐஷர் மோட்டார்ஸின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 19.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
November 30, 2025
Dinamani Namakkal
புலமை கனிந்த போற்றிப் பாடல்
பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தம் புலமைத் திறத்தால் ஆண்டவர் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவ ருக்குச் சைவமும் தமிழுமே மூச்சு. மறைவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்புவரை கவிதை பாடிய வர். எந்தக் கருத்தை அறிந்தாலும் அதை மேலும் அழகுபடுத்திப் பாடுவது அவருக்கு இயல்பு. நலி வுற்றுப் படுக்கையில் கிடந்த அவரைக் காண வந்த கஞ்சனூர் அக்கினிலிங்க சாஸ்திரி, சிவா னந்த லகரியில் உள்ள 'ஸதா மோஹ அடவ்யாம்' என்னும் பாடலை விளக்கினார்.
2 min |
November 30, 2025
Dinamani Namakkal
இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்தியா
மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 14-3 கோல் கணக்கில் கனடாவை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
November 30, 2025
Dinamani Namakkal
வாடிய மலர்களால் வாய்ப்பு...
வீடுகள், கோயில்களில் வழிபாடு செய்ய நாம் அன்றாடம் பயன்படுத்தும் மலர் மாலைகள் வாடி வதங்கியவுடன், அவற்றைக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுவது வழக்கம். அவ்வாறு வாடி, காய்ந்த மலர் மாலைகளை வணிக வாய்ப்பாகக் கருதி, புதுமையான தொழிலாக, புனிதமான சேவையாக மேம்படுத்தியுள்ளார் சென்னையை அடுத்த தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் தனுஜா.
1 min |
November 30, 2025
Dinamani Namakkal
நீர்நிலைகளின் பாதுகாவலன்..!
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பேராவூரணி அருகேயுள்ள நாடியம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முப்பத் தெட்டு வயது நிரம்பிய நிமல் ராகவன்.
1 min |