試す 金 - 無料
வையத்து வாழ்வீர்காள்!
Aanmigam Palan
|July 16-31, 2025
பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.
-
ஜீயர், 'இங்குதான் ஸ்ரீராமர் ஜடாயுவிற்கு அந்திம காரியங்கள் செய்தார். ஜடாயு எவ்வளவு பெரிய பாக்கியவான்! ராமன் எவ்வளவு கருணையானவன்' எனக்கூறிக் குளத்தைக் காட்டினார். “ஜடாயுவிற்கு பெரிய உடையார் என்ற திருநாமம் உண்டு! என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த கோயிலுக்கு நம் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்திருக்கிறார். அவரின் பிரபந்தம் ஒன்றை நான் இப்பொழுது பாடுகிறேன்.' என்று கூறிவிட்டு, கண்களை மூடிப் பாடினார்.
'ஆஹா! அற்புதம்! நாங்கள் செய்த பாக்கியம் உங்களுடன் இருப்பது" எனக் கூறினர்.
'எல்லாம் என் குரு நம்பிள்ளையின் ஆசிர்வாதம். என் விருப்பம் போல் என்னை ஒரு சந்நியாசியாக இருக்க அனுமதித்து, ஜீயராகவும் உருவாக்கியவர் அவர்தான்'.
தன் கையில் இருந்த தண்டத்தில் தலையினை வைத்து குருவை நினைத்துப் பிரார்த்தித்தார். ஒரு சீடன் தயங்கியபடி,
"உங்களுக்கு ஏன் இப்படி ஒரு வித்தியாசமான பெயர்?” என கேட்டான்.
"அதுவா! அழகிய மணவாளன் என்ற திருநாமம், ஆண்டாள் காலத்திலிருந்து நம் பெருமாளுக்கு உண்டு. ஆனால், நம் பெருமாளுடைய முன்னழகைக் காட்டிலும், பின்னழகு இன்னமும் அழகாக இருக்குமாம். அதனால் 'முன்னிலும் பின்னழகிய பெருமாள்' என்று நம்பெருமாளுக்கு விசேஷமான திருநாமமும் உண்டு. வடக்கே இருக்கும் கூட்டத்தை தெற்குப் பக்கம் ஈர்க்க அவர் பின்னழகைக் காட்டினார் என சுவையாகக் குறிப்பிடுவார்கள். இந்தப் பெயர் என் குருநாதருக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு பிடித்த எனக்கும் பின்னழகு பெருமாள் என்ற பெயரை எனக்குச் சூட்டினார். அவருக்கு கோதண்டராமன் என் மேல் அலாதியான
'அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா அன்பு. அந்தப் பெயரே மருவி பின் பழகிய பெருமாள் ஜீயர் என்று நாளாவட்டத்தில் அழைக்கப்படுகிறேன். இது பற்றி ஒரு செய்யுள் கூட உண்டு.
このストーリーは、Aanmigam Palan の July 16-31, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Aanmigam Palan からのその他のストーリー
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size

