Facebook Pixel சீரான வாழ்வருளும் சிவவடிவங்கள் | Aanmigam Palan - religious-spiritual - Magzter.comでこの記事を読む

試す - 無料

சீரான வாழ்வருளும் சிவவடிவங்கள்

Aanmigam Palan

|

February 16, 2023

மகாசிவராத்திரி 18-2-2023

- அனந்தபத்மநாபன்

சீரான வாழ்வருளும் சிவவடிவங்கள்

1. அகத்தீஸ்வரர்

தமிழ் வளர்த்த சான்றோர்களில் முதன்மை பெற்றவர் அகத்தியர். கடல்கொண்ட மதுரையில், முதற்சங்கம் இருந்த காலத்தில், அதில் தலைமைப் புலவராகச் சிவபெருமான் வீற்றிருந்தபோது, முதன்மைப் புலவனாக இருந்து தமிழ் ஆராய்ச்சி செய்த தனிப்பெரும் புலவர். அசுரகுலத்து இராவணன் தமிழர்களுக்கு இன்னல்களை விளைத்த போது, அவனைத் தனது இசையால் வென்று இலங்கைக்கு ஓட்டியவர். தமிழகம் சிறந்து விளங்குவதற்குக் காரணமான காவிரியாற்றையும், தாமிரபரணியாற்றையும் தந்தவர்.
சிவனருள் பெற்ற தவயோகி.

சிவபெருமான், இவருக்காகவே கயிலைமலையில் நடைபெற்ற தனது திருமணக்கோலக் காட்சியைத் தென்னகத்தில் இருபத்தியோரு இடங்களில் மீண்டும் மீண்டும் காட்டினார் என்றால், இவருடைய பக்தியின் பெருமையை நம்மால் அளவிடமுடியுமா? சிவபெருமான், அகத்தியரையும் அவர் செய்கின்ற சிவபூஜையையும் பெரிதும் விரும்புகின்றான் என்பதைத் தேவாரம் ‘‘அகத்தியனை உகப்பானை’’ என்று போற்றுகின்றது.

2. அக்னீஸ்வரர்

உலகின் ஆக்கசக்திக்கு ஆதாரமாக இருப்பது ‘‘தீ’’ என்ற நெருப்பாகும். உயிர்கள் தோன்றி இன்பமடைதல் பொருட்டுப், பரமசிவத்தால் முதலில் ஆகாசமும் அதனுள் வளிமண்டலமும், அதிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் படிப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டன. இந்த ஐந்து பொருட்களின் கூட்டுச்சேர்க்கையால் உலகமும் அதில் உயிர்த்தொகுதியும் மண், கல், மலை முதலான சடப்பொருட்களும் தோன்றியுள்ளன.  
மேற்குறித்த ஐந்து மூலப்பொருட்களான ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியவற்றுள் ‘‘தீ’’ ஒன்றாக இருந்தாலும் அது மற்ற நான்கு பொருட்களிலும் மறைந்து நின்று, அவற்றைத் தொழிற்படுத்தும் சக்தியாகவும் விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, ‘‘தீ’’ வானில் மின்னல் இடியாகவும், நிலத்தில் உள்ள எரிமலையாகவும், கடலுக்குள் வடவைத் தீயாகவும், காற்றுக்குள் உரசற்தீயாகவும் மறைந்து நின்று செயல்படுகின்றது.
 

Aanmigam Palan からのその他のストーリー

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size