試す - 無料

தமிழ் தேசியக்கட்சிகள் தமது வரலாற்று தவறினை திருத்தி உள்ளூராட்சி சபைகளில் கூட்டாக செயல்பட வேண்டும்

Thinakkural Daily

|

May 15, 2025

தமிழர் தேசம் காக்க போராடியவர்கள் இரத்தம் சிந்திய நிலத்தின் நின்று அரசியல் செய்யும் கட்சிகள் தனது வரலாற்று தவறினை திருத்திக் கொள்ளவும் அதன் அடையாளமாகவும் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைகளில் எவ்வாறு கூட்டாக செயல்பட போகின்றோம் என்று தொடரில் பொது கூட்டு கொள்கை பிரகடனம் செய்ய வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

- புதுக்குடியிருப்பு நிருபர்

அவரால் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈழத் தமிழர்களின் அரசியல் எழுச்சியையும், அதன் தாகத்தையும், அதற்கான போராட்ட வலிமையையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்க சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாரிய போர் தொடுத்து இறுதியில் இனப்படுகொலையை நிகழ்த்தி மனித பேரவலத்தை ஏற்படுத்தினாலும்; வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும்.

எனினும் தமிழர் தேசத்தில் ஒரு சில தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் அரசியல், தலைமைத்துவ போட்டிகள் காரணமாகவும் சுக போக அரசியலுக்காகவும் கொள்கை தடம் மாறியவர்களாலும் அவர்களின் வழிகாட்டலில் இனப்படுகொலையாளர்களுக்கே வாக்களிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள் என்பதன் குற்றப் பழியை தடம் மாறிய அரசியல் கட்சிகளும் அதன் தலைமைத்துவங்களும் ஏற்றே ஆக வேண்டும்.

இதன் காரணமாக தமிழ் இன அழிப்பிற்கும், இனப்படுகொலைக்கும் துணை நின்ற பிரதான சக்தி எமது மண்ணில் கோட்டை அமைத்து அதனை விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எம்மவர்களே துணை நிற்கும் அரசியல் சூழ்நிலை என் மண்ணில் தோன்றியிருப்பதை அவதானிக்கலாம். இது நாம் அனுபவித்த முள்ளிவாய்க்கால் அவலத்தை விட மிகப் பயங்கரமான அரசியல் அவலத்திற்கே வித்திடும் என்பதை இச் சந்தர்ப்பத்திலாவது அரசியல் கட்சிகளும் அதன் தலைமைத்துவம் உணர வேண்டும். இல்லையேல் வரலாறு இவர்களை மன்னிக்காது.

Thinakkural Daily からのその他のストーリー

Thinakkural Daily

கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது

நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது

time to read

2 mins

October 14, 2025

Thinakkural Daily

காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்

மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்

time to read

1 mins

October 14, 2025

Thinakkural Daily

பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்

சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?

ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்

வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு

டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்

ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size