試す 金 - 無料
குறைசொல்வோரைப் புறக்கணிக்கும் தனித்துவக் கலைஞர்
Tamil Murasu
|September 17, 2025
பெரும்பாலும் வயலின், பியானோ, கித்தார் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் பெண்களுக்கு மத்தியில் நாதஸ்வரக் கலைஞர் என்ற தனித்துவமிக்க பாதையைத் தேர்ந்தெடுத்தார் குமாரி அஞ்சலி கதிரவன், 31. பொதுவாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்கலையில் பெண்கள் அரிதாகவே காணப்படுகின்றனர். ஆனால், மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த குமாரி அஞ்சலிக்கு அது ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. சொல்லப்போனால், அதுவே தம்மை நாதஸ்வரம் கற்றுக்கொள்ளத் தூண்டியதாகக் கூறினார் குமாரி அஞ்சலி.
இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், கேள்வி ஞானத்தில் ஏழு வயதிலிருந்தே ஒரு பாடகியாக வலம் வந்துள்ளார்.
பல்லூடகப் படைப்பாற்றல் கல்வியில் பட்டயம் பெற்ற குமாரி அஞ்சலிக்கு எப்போதும் இசைமீது தனி நாட்டம் இருந்துவந்துள்ளது. அதன் வெளிப்பாடாக அகரம் இசைப்பள்ளியையும் அவர் நிறுவினார்.
தமது 20வது வயதில் தமிழ்நாட்டின் சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசையை முறைப்படி, இன்னும் ஆழமாகக் கற்றுக்கொள்ள முடிவெடுத்தார்.
மனிதக் குரலின் நுணுக்கங்களைக் களை வெளிப்படுத்தும் நாதஸ்வரம் ஒரு கடுமையான ஆசான் எனலாம். அது, ஒரு பாடகருக்குக் குரலை வலிமையுடனும் துல்லியத்துடனும் வெளிப்படுத்தக் கற்றுக்கொடுக்கும்.
எனவே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல அதே பல்கலைக்கழகத்தில் வாய்ப்பாட்டுடன் நாதஸ்வரத்தையும் கற்றுக்கொள்ள குமாரி அஞ்சலி முடிவுசெய்தார். “குடும்பத்தினர் முதலில் தயங்கினாலும் என் விருப்பத்திற்கு இணங்க என்மீது நம்பிக்கை வைத்து இந்தியாவுக்கு வழியனுப்பினர்,” என்ற குமாரி அஞ்சலி, தம் பெற்றோரின் ஊக்குவிப்பால் முதன்முறையாக இந்தியாவிற்குச் சென்றார்.
“நாதஸ்வரம் கற்கப்போகிறேன் என அஞ்சலி என்னிடம் சொன்னபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“அங்கு பல இடர்ப்பாடுகளையும் சவால்களையும் அவர் சந்தித்தார். பலமுறை மனம் தளர்ந்து மலேசியாவுக்கே திரும்பவும் அவர் எண்ணினார். ஆனால், அப்படி நிறுத்திவிட்டால் பெற்றோரிடமும் 'உன்னால் சாதிக்க முடியாது' என வசை பாடியோரிடமும் என்ன சொல்வது என்ற எண்ணம் அவரை அந்த இசைக்கருவியைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளச் செய்தது,” என்றார் குமாரி அஞ்சலியின் தந்தையார் கே.எஸ். கதிரவன், 60.
அங்கு ஐந்தரை ஆண்டுகள் செலவிட்டு திருக்களர் துரை பாரதிதாசன் போன்ற அனுபவம் வாய்ந்த குருமார்களிடம் குமாரி அஞ்சலி நாதஸ்வரம் கற்றுக்கொண்டார்.
このストーリーは、Tamil Murasu の September 17, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Tamil Murasu からのその他のストーリー
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size

