試す 金 - 無料
காலங்கடந்த ஒற்றுமையின் பயன்?
Tamil Mirror
|June 09, 2025
நாட்டின் தென் பகுதியிலும், வடக்கு கிழக்கிலும் காலங்கடந்த ஒற்றுமை குறித்த விவாதங்கள் இப்போது பிரபலமாகப் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவை பயனுடையவைதானா?
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் ஈகோ போர்களைத் தாண்டி, கொழும்பு மேயர் பதவிக்காக ஒன்றிணைவது பற்றிய செய்தி வந்தபோது, இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் அதை ‘மிக மிகக் கால தாமதமானது" என்றுதான் வரவேற்றனர். நாட்டையே ஆட்சி செய்யும் வாய்ப்பிருந்த போதிலும் அதனை நழுவவிட்டு தற்போது கொழும்பு மேயர் பதவியைத் தக்கவைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இணைந்து போராடுகின்றன. இக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால், சஜித்தும் ரணிலும் ஒற்றுமையின் சக்தியை உணர்ந்து, வெறுப்பின் கோடரியை என்றென்றும் புதைக்க வேண்டும் என்று கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இது போன்றதொரு நிகழ்வு கடந்த செப்டெம்பரில் நடைபெற்றிருந்தால் வேறு வகையான நாடு இருந்திருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற அதிகாரங்கள் ஜே.வி.பி. கைகளில் இருப்பதனால், உள்ளூராட்சித் தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுக்கொள்ளவே ஜே.வி.பி. தீவிரமாக முயன்றது. மாநகர சபைகள் முதல் பிரதேச சபைகள் வரை முழுவதையும் வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதனை வைத்தே அவர்கள் பெருமையும் பேசிக் கொண்டனர். அதனடிப்படையில் தான், 339 சபாக்களையும் ஒரே நேரத்தில் கைப்பற்றுவோம். ஆதிக ஆசனங்களுடன் எதிர்க்கட்சிகளில் ஏதேனும் ஒரு சபையையேனும் வெற்றிகொண்டால், அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அரசாங்க நிதியிலிருந்து ஒரு சதம் கூட வழங்கப்படாது. “எதிர்க்கட்சிகள் அனைத்தும் முரடர்கள், நேர்மையற்றவர்கள் மற்றும் ஊழல் நிறைந்தவர்கள். ஊழல்வாதிகளுக்கு பொதுப் பணத்தைக் கொடுக்க முடியாது. ஆனால், எங்களது சபைகளுக்கு, நான் கண்ணிமைக்காமல் கொடுப்பேன்" என்று ஜனாதிபதி அறிவித்தார். அது அவரது எச்சரிக்கையாகவே இருந்தது.
ஆனால், அரசியல் சொல்லாடல்கள் இருந்தபோதிலும், நம்பிக்கையான ஆரவாரம் மற்றும் தற்பெருமை இருந்தபோதிலும், இறுதித் தேர்தல் முடிவுகள், ஆறு மாதங்களுக்கு முன்பு ஜே.வி.பியை நோக்கி வீசிய 6.8 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அலை 2.3 மில்லியனாகக் குறைந்து. மிகக் குறுகிய காலத்திற்குள் ஜே.வி.பியின் ஆதரவில் ஏற்பட்ட இந்த வியத்தகு சரிவு, அதன் தலைவர்களுக்கு அவர்களின் ஆதரவு வேகமாகக் குறையத் தொடங்கியிருப்பதை எச்சரித்திருக்க வேண்டும்.
このストーリーは、Tamil Mirror の June 09, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Tamil Mirror からのその他のストーリー
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
