試す 金 - 無料
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!
Dinamani Puducherry
|September 02, 2025
இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.
நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக்கண்டும் அமைதியாகக் கடந்துபோகும் மௌன சாட்சிகளாக நாம் இருக்கிறோம். இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக தற்போது சட்டங்கள் ஏராளமாக இயற்றப்பட்டுள்ள போதிலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது.
இதுபோன்ற வன்கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பள்ளிகளில் படித்து வருகிற சிறுமிகளாக இருப்பது சமுதாயப் பேரவலமாக இருக்கிறது.
'யுனிசெஃப்' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் தனது அறிக்கை ஒன்றில் ஆண்டுக்கு சராசரியாக 73.6 கோடி இளம் வயதுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 51 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது நெருங்கிய துணைவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் வன்கொடுமையால் உயிரிழந்துள்ளதாகவும் கூறுகிறது.
உலக அளவில் 11 முதல் 15 வயதுடைய சிறுமிகள் குறிப்பாக ஏழ்மையான மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களே பாலியல் வன்கொடுமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அண்மையில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநாட்டிலும், நிலையான நீடித்த வளர்ச்சி இலக்குகளிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன.
2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளுக்கு எதிரான சுரண்டல், துஷ்பிரயோகம், அனைத்து வகையான வன்முறை மற்றும் சித்திரவதையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நெறிமுறை விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் குழந்தைகளை தவறாகச் சித்தரிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
このストーリーは、Dinamani Puducherry の September 02, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Puducherry からのその他のストーリー
Dinamani Puducherry
புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.
2 mins
April 28, 2026
Dinamani Puducherry
கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
1 min
April 28, 2026
Dinamani Puducherry
கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு
கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
April 28, 2026
Dinamani Puducherry
தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு
கடும் வெயில் எதிரொலி
1 min
April 28, 2026
Dinamani Puducherry
ரக்பி ப்ரீமியர் லீகில் மகளிர் அணிகள் அறிமுகம்
ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிர் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
1 min
April 28, 2026
Dinamani Puducherry
சபலென்கா, லெய்லா முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min
April 28, 2026
Dinamani Puducherry
15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
வேலூர், பரமத்தி வேலூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகப் பதிவானது.
1 min
April 28, 2026
Dinamani Puducherry
தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.
2 mins
April 27, 2026
Dinamani Puducherry
மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
1 min
April 27, 2026
Dinamani Puducherry
இந்திய மகளிருக்கு முதல் வெற்றி
தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் வெற்றியை பெற்றது.
1 min
April 27, 2026
Translate
Change font size

