Intentar ORO - Gratis
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!
Dinamani Puducherry
|September 02, 2025
இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.
நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக்கண்டும் அமைதியாகக் கடந்துபோகும் மௌன சாட்சிகளாக நாம் இருக்கிறோம். இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக தற்போது சட்டங்கள் ஏராளமாக இயற்றப்பட்டுள்ள போதிலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது.
இதுபோன்ற வன்கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பள்ளிகளில் படித்து வருகிற சிறுமிகளாக இருப்பது சமுதாயப் பேரவலமாக இருக்கிறது.
'யுனிசெஃப்' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் தனது அறிக்கை ஒன்றில் ஆண்டுக்கு சராசரியாக 73.6 கோடி இளம் வயதுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 51 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது நெருங்கிய துணைவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் வன்கொடுமையால் உயிரிழந்துள்ளதாகவும் கூறுகிறது.
உலக அளவில் 11 முதல் 15 வயதுடைய சிறுமிகள் குறிப்பாக ஏழ்மையான மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களே பாலியல் வன்கொடுமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அண்மையில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநாட்டிலும், நிலையான நீடித்த வளர்ச்சி இலக்குகளிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன.
2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளுக்கு எதிரான சுரண்டல், துஷ்பிரயோகம், அனைத்து வகையான வன்முறை மற்றும் சித்திரவதையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நெறிமுறை விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் குழந்தைகளை தவறாகச் சித்தரிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
Esta historia es de la edición September 02, 2025 de Dinamani Puducherry.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Puducherry
Dinamani Puducherry
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Puducherry
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Puducherry
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Puducherry
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Puducherry
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Translate
Change font size
