試す - 無料

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Dinamani Nagapattinam

|

July 23, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி, ஜூலை 22:

குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள விவகாரங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே, இதுகுறித்து ஒரு வாரத்துக்குள், அதாவது வரும் 29-ஆம் தேதிக்குள் பதிலை சமர்ப்பிக்கமாறு மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

தமிழகம், கேரளம் ஆட்சேபம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த அரசியல் சாசன அமர்வில் வழக்கு செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் பி.வில்சன் மற்றும் கே.கே. வேணுகோபால் ஆகியோர், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். குடியரசுத் தலைவரின் கேள்விகளை விசாரணைக்கு அனுமதித்ததை அவர்கள் கேள்வி எழுப்பினர்.

வில்சன் வாதிடுகையில், 'குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்புகளில் விளக்கங்கள் அளித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் மீண்டும் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விகள் விசாரணைக்கு உகந்தவையல்ல என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு' என்றார்.

வழக்குரைஞர் ராகேஷ் திவேதி வாதிடுகையில், 'குடியரசுத் தலைவர் தனது கேள்விகளில் குறிப்பிட்டுள்ளதுபோல, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான மோதல்களைத் தீர்ப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது பிரிவு எப்படி பொருந்தும்?. எனவே, குடியரசுத் தலைவரின் கேள்வியே தவறானது' என்றார்.

Dinamani Nagapattinam からのその他のストーリー

Dinamani Nagapattinam

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Nagapattinam

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Nagapattinam

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Translate

Share

-
+

Change font size