Try GOLD - Free

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Dinamani Nagapattinam

|

July 23, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி, ஜூலை 22:

குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள விவகாரங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே, இதுகுறித்து ஒரு வாரத்துக்குள், அதாவது வரும் 29-ஆம் தேதிக்குள் பதிலை சமர்ப்பிக்கமாறு மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

தமிழகம், கேரளம் ஆட்சேபம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த அரசியல் சாசன அமர்வில் வழக்கு செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் பி.வில்சன் மற்றும் கே.கே. வேணுகோபால் ஆகியோர், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். குடியரசுத் தலைவரின் கேள்விகளை விசாரணைக்கு அனுமதித்ததை அவர்கள் கேள்வி எழுப்பினர்.

வில்சன் வாதிடுகையில், 'குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்புகளில் விளக்கங்கள் அளித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் மீண்டும் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விகள் விசாரணைக்கு உகந்தவையல்ல என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு' என்றார்.

வழக்குரைஞர் ராகேஷ் திவேதி வாதிடுகையில், 'குடியரசுத் தலைவர் தனது கேள்விகளில் குறிப்பிட்டுள்ளதுபோல, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான மோதல்களைத் தீர்ப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது பிரிவு எப்படி பொருந்தும்?. எனவே, குடியரசுத் தலைவரின் கேள்வியே தவறானது' என்றார்.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Nagapattinam

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

அம்மானை!

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Nagapattinam

1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்

time to read

1 min

November 02, 2025

Dinamani Nagapattinam

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Translate

Share

-
+

Change font size