試す - 無料

நமது மொழி - வேற்றுமையில் ஒற்றுமை!

Dinamani Karur

|

June 09, 2025

இந்தியாவின் மொழி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

- கோதை ஜோதிலட்சுமி

தனது அரசுமுறைப் பயணத்தில் ஸ்பெயினில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் ஒவ்வொருவரும் மனம்கொள்ள வேண்டிய சொற்கள்.

மொழி என்பது மானுடத்தின் வரம். மனித சமூகத்தின் உயிர்நாடி. தகவல் பரிமாற்றத்துடன் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சாதனமும் ஆகும். ஒரு இனத்தின் பண்பாடு, மரபுகள், பழக்கவழக்கங்கள், வரலாறு ஆகியவற்றைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் ஊடகமாக மொழி செயல்படுகிறது. மொழியை இழப்பது இனத்தின் அடையாளத்தை இழப்பதற்குச் சமம்.

அவரவர் தாய்மொழி அவரவர்க்கு உயர்வானது. எந்த மொழியையும் கற்கலாம்; அதன் அழகை, இலக்கியங்களை ரசிக்கலாம். அதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறது. தனது மொழியின் பெருமைகளைப் பேசலாம். அதேநேரம் எந்த மொழியையும் விமர்சிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. தேசங்கள் தாண்டியோ அல்லது தேசத்திற்குள்ளோ உலகம் முழுமைக்கும் இது பொருந்தும்.

மொழி குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மொழியியல் அறிஞர்களின் இந்திய மொழிகள் குறித்த ஆராய்ச்சிகள் சில மொழிகளை செம்மொழி என வரையறுக்கின்றன. செம்மொழி குறித்த சிந்தனை இந்தியாவில் மட்டுமா? உலகின் மற்ற பகுதிகளிலும் இத்தகைய சிந்தனை உண்டா?

உலகில் கிரேக்கம், லத்தீன், சம்ஸ்கிருதம், சீனம், அரபி, ஹீப்ரு மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பின் சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு மொழி செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். 1500 முதல் 2000 ஆண்டுகள் பழைமையானதாகவும், இலக்கிய வளம் மிக்கதாகவும், இலக்கணச் செழுமை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அந்த மொழியின் இலக்கியப் படைப்புகள் வேறு எந்த மொழியின் தழுவலாகவும் இல்லாமல் தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அப்படியான மொழியே செம்மொழி. செம்மொழி, காலந்தோறும் புதிய இலக்கியப் படைப்புகளை, சிந்தனைகளை உருவாக்குவதற்கான வளம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

Dinamani Karur からのその他のストーリー

Dinamani Karur

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Karur

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size