நமது மொழி - வேற்றுமையில் ஒற்றுமை!
Dinamani Karur
|June 09, 2025
இந்தியாவின் மொழி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
தனது அரசுமுறைப் பயணத்தில் ஸ்பெயினில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் ஒவ்வொருவரும் மனம்கொள்ள வேண்டிய சொற்கள்.
மொழி என்பது மானுடத்தின் வரம். மனித சமூகத்தின் உயிர்நாடி. தகவல் பரிமாற்றத்துடன் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சாதனமும் ஆகும். ஒரு இனத்தின் பண்பாடு, மரபுகள், பழக்கவழக்கங்கள், வரலாறு ஆகியவற்றைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் ஊடகமாக மொழி செயல்படுகிறது. மொழியை இழப்பது இனத்தின் அடையாளத்தை இழப்பதற்குச் சமம்.
அவரவர் தாய்மொழி அவரவர்க்கு உயர்வானது. எந்த மொழியையும் கற்கலாம்; அதன் அழகை, இலக்கியங்களை ரசிக்கலாம். அதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறது. தனது மொழியின் பெருமைகளைப் பேசலாம். அதேநேரம் எந்த மொழியையும் விமர்சிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. தேசங்கள் தாண்டியோ அல்லது தேசத்திற்குள்ளோ உலகம் முழுமைக்கும் இது பொருந்தும்.
மொழி குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மொழியியல் அறிஞர்களின் இந்திய மொழிகள் குறித்த ஆராய்ச்சிகள் சில மொழிகளை செம்மொழி என வரையறுக்கின்றன. செம்மொழி குறித்த சிந்தனை இந்தியாவில் மட்டுமா? உலகின் மற்ற பகுதிகளிலும் இத்தகைய சிந்தனை உண்டா?
உலகில் கிரேக்கம், லத்தீன், சம்ஸ்கிருதம், சீனம், அரபி, ஹீப்ரு மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பின் சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு மொழி செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். 1500 முதல் 2000 ஆண்டுகள் பழைமையானதாகவும், இலக்கிய வளம் மிக்கதாகவும், இலக்கணச் செழுமை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அந்த மொழியின் இலக்கியப் படைப்புகள் வேறு எந்த மொழியின் தழுவலாகவும் இல்லாமல் தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அப்படியான மொழியே செம்மொழி. செம்மொழி, காலந்தோறும் புதிய இலக்கியப் படைப்புகளை, சிந்தனைகளை உருவாக்குவதற்கான வளம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
Diese Geschichte stammt aus der June 09, 2025-Ausgabe von Dinamani Karur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Karur
Dinamani Karur
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Karur
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Karur
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Karur
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Karur
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Karur
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Karur
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Karur
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Karur
கலப்படம் தடுக்க புதிய பால் கொள்கை: தமிழக அரசு முடிவு
பாலில் கலப்படத்தை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Karur
திமுகவை வீழ்த்த தவெகவால்தான் முடியும்: விஜய்
திமுகவை வீழ்த்த தவெகவால்தான் முடியும் என்று தவெக தலைவர் விஜய் பேசினார்.
1 mins
December 19, 2025
Translate
Change font size

