நல்வழிப் பயணம் - சமூகமும் பொறுப்பு!
Dinamani Dharmapuri
|August 25, 2025
பள்ளி, கல்லூரியில் இருந்து வெளிவரும் அத்தனை மாணவர்களும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். தொடர் ஓட்டம்போல் சமூகமும் இவர்களுடன் இணைய வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஒருவரின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.
நான் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டி, விளம்பரச் சிற்றேடு தயாரிப்பு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகளுக்கு நடுவராக என்னை அழைத்திருந்தார்கள். நிறைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள். தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரை எழுதியிருந்தார்கள். ஏறக்குறைய அனைவருமே சிறப்பாக எழுதியிருந்தார்கள். அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனைகளையும், கருத்துகளையும் கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை விதமான போதைப் பொருள்கள் கிடைக்கின்றன என்று அவர்கள் எழுதியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் ஏற்பட்டது. போதைப் பொருள் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகிவிடக் கூடாது என்று எல்லோருமே வலியுறுத்தியிருந்தார்கள்.
மாணவர்களுக்கு சுயக் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் அவசியம்; எனவே, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடித்திருந்தது சிறப்பு. விளம்பரச் சிற்றேடு தயாரிக்கும் போட்டியிலும், ஓவியப் போட்டியிலும் கலக்கியிருந்தார்கள். வார்த்தைகளால் சொல்வதைவிட வண்ணங்கள் அதிகம் பேசின. தலைப்பு - போதைப் பொருளுக்கு மறுப்பு சொல்லுங்கள்' போதைப் பொருள் உபயோகத்தால் நம் நாடு கலங்கிப் போய், கருத்துப் போயிருப்பதாக ஒரு படம்; எதிர்காலம் இருண்டு போகும் என்ற எச்சரிக்கை படம் - என அருமையாக வரைந்திருந்தார்கள். அவர்களின் உள்ளத்தில் இருந்துவந்த உணர்வு; நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட தெளிவு; போதைப் பொருள் கூடாது என்ற மன உறுதி அவர்களில் வெளிப்பட்டன.
இந்தப் பிள்ளைகள் எந்தக் காரணம் கொண்டும் அதைத் தொட மாட்டார்கள் என்ற நம்பிக்கை தோன்றியது. பதின்பருவ பிள்ளைகளின் மனதில் இந்த எண்ணத்தை விதைத்துவிட்டோம் என்றால், அவர்களைக் காப்பாற்றி விட்டோம் என்று மன நிறைவு கொள்ளலாம். இந்தக் காலப் பிள்ளைகள் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்கள் கடலில் ஒரு துளி அன்று, ஒரு துளியில் அடங்கியுள்ள கடல்.
எதற்குப் பரிசு கொடுப்பது என்று முடிவு செய்வதில் சிரமமாகிவிட்டது. சரியான மேய்ப்பர் இருந்து விட்டால் மந்தை ஆடுகள் வழிதவறிப் போகாது என்பதுபோல், சரியான வழிகாட்டுதல் இருந்தால் இளம் தலைமுறை திசைமாறிப் போகாது. ஆகவே, இந்த மாதிரி போட்டிகளை நடத்தினால் அவர்களை யோசிக்க வைக்க முடியும்.
このストーリーは、Dinamani Dharmapuri の August 25, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dharmapuri からのその他のストーリー
Dinamani Dharmapuri
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதி தற்கொலை
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ
அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் வரும் டிச.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Dharmapuri
கட்சி நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஜனவரி 5-க்குள் அரசிதழில் வெளியிட உத்தரவு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Translate
Change font size

