試す 金 - 無料
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
Nakkheeran
|November 19-21, 2025
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
மேலும், இலங்கையில் நடைபெற்ற போர்களுக்கான பயிற்சியினை LTTE-யினர் பெறுவதற்காக, தமிழ்நாட்டின் தற்போதைய நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையிலும், சேலம் -கொளத்தூரிலும் இரண்டு இராணுவ முகாம்கள் செயல்பட்டன. விவசாய நிலத்தில் வெளிப்படையாகவே, இந்த இராணுவ முகாம் 4 வருடங்களாகச் செயல்பட்டது. இதில் வே.பிரபாகரன் இராணுவப் பயிற்சியினை மேற்கொண்டார். இந்தப் பயிற்சிக்காகவும், அவர்களது நலனுக்காகவும், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பணமும் ஆதரவும் அளித்ததுடன், தமிழக அரசும் உதவித்தொகையாக கோடிக்கணக்கான பணமும், மானியமும் வழங்கியது.
பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள்: 25.02.1997-ல் நீதிபதி சிங்காரவேலு ஆணையத்திடம், Q-Branch I.G. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, 1980-களில் LTTE பிரிவினரால் தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) என்ற தமிழ் தேசியவாத ஆயுதக்குழு ஏற்படுத்தப் பட்டது. இது இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியின் ஆயுதப் பிரிவாக நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களாக பெருமாள் வாத்தியார், தமிழரசன் ஆகியோர் அறியப்படுகின்றனர். இந்த அமைப்பு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது என கூறியுள்ளார்.
உட்பகையால் கொல்லப்பட்ட தமிழ் அமைப்புகளின் தலைவர்கள்: 1990 காலகட் டங்களில் இலங்கையில் செயல்படும் தமிழ் அமைப்புகளாக EPRLF, PLOTE, ENDLF, TELO, EPDP மற்றும் LTTE போன்றவை இருந்தன. இவர்களுக்குள், தலைமை ஏற்பது யார் என்பதும், வேறு பல காரணங்களும் உட்பகையாக இருந்தது. இந்நிலையில் 19.06.1990-ல் EPRLF-பிரிவின் தலைவரான பத்மநாபா உள்ளிட்ட 14 பேரை, பொட்டு அம்மான் தலைமையிலான LTTE பிரிவினர் சென்னை, கோடம்பாக்கத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர். இதில் மேலும் 21 பேர் படுகாய மடைந்தனர். இந்த வழக்கிலும், இதே கால கட்டத்தில் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களான அமிர்தலிங்கம், பிரேமதாசா, மத்தாயா, உமா மகேஸ்வரன், சபாரத்தினம் ஆகியோரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களையும் சந்தேகத்தின் பேரில், வேலூர் கோட்டையில் இருந்த காவலர் பயிற்சிப் பள்ளியை மூடிவிட்டு, 14.12.1990-ல் சிறப்பு முகாமாக மாற்றிவிட்டு அடைப்புச் செய்தனர்.
このストーリーは、Nakkheeran の November 19-21, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Nakkheeran からのその他のストーリー
Nakkheeran
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
குமுறும் பெண்கள்!
3 mins
November 19-21, 2025
Nakkheeran
தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!
“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”
5 mins
November 19-21, 2025
Nakkheeran
கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!
\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
காணாமல் போன அ.தி.மு.க.!
புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
தலைமறைவான சில்மிச டாக்டர்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
கைதி எண் 9658
ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!
அதிர்ச்சியில் விஜய்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.
2 mins
November 19-21, 2025
Listen
Translate
Change font size
