ஆகாசமூர்த்தி
Aanmigam Palan
|October 01, 2024
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஈசனின் கூத்து பேசப் பெறுகின்றது. பாண்டரங்கமும், கூத்துகளில் கொடுகொட்டியும், கபாலமும் சிவனாரின் ஆடல்களாகச் சங்க இலக்கியமான கலித் தொகையிலும், பின்னர் மலர்ந்த சிலம்பு என்னும் காப்பியத்திலும் எடுத்துரைக்கப் பெறுகின்றன. திருமூலர் தில்லைக் கூத்துத் தரிசனத்தின் சிறப்பைக் கூறி யுள்ளார். காரைக்காலம்மையாரோ அப்பனின் திருக்கூத்து பற்றியும், அவன் ஆடலுக்குரிய இசைக் கருவிகள் பற்றியும் இனிய தமிழ்ப் பாக்களால் எடுத்துரைத்துள்ளார்.
மூவர் தேவாரப் பாடல்களிலும், மணி வாசகரின் திருவாசகத்திலும் கூத்திறையின் தோற்றப்பொலிவு பரக்கப் பேசப்பெறுகின் றன. பன்னிரு திருமுறைகளிலும் ஆடல் வல்லானின் அற்புதக் கூத்து பற்றி பேசாத நூலே இல்லை எனலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பண்டு முதல் ஆடல்வல் லானின் திருக்கூத்து பேசப்பெற்றாலும், கூத்திறையின் கோலம் காட்டும் பண்டைய திருமேனிகளை நாம் கால வெள்ளத்தில் இழந்துவிட்டோம். இருப்பினும் மகேந்திர பல்லவன் காலந்தொட்டு (கி.பி. 6-7ஆம்நூற் றாண்டு) தொடர்ச்சியாக அத்திருவடிவக் காட்சிகளை நாம் பல்வேறு கோயில்களில் கண்டுகளிக்க இயலுகின்றது.
முற்காலச் சோழர் படைப்புக்களில் குறிப்பாகச் செம்பி யன் மாதேவியார் எடுத்த திருக்கோ யில்களில் ஆடல் வல்லானின் சிற்பம் கோஷ்டதிருமூர்த்த மாக அமைக்கப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் செம்பில் வடிக்கப்பெறும் கலையும் உன்னத நிலை பெற்றது. பராந்தக சோழன், செம்பி யன் மாதேவியார், மதுராந்தக உத்தம சோழர், ராஜராஜன், ராஜேந்திரன் காலத் திய ஆடவல்லான் கற்சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் தனிச்சிறப்புடையவையாய் திகழலாயின.

यह कहानी Aanmigam Palan के October 01, 2024 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Aanmigam Palan से और कहानियाँ
Aanmigam Palan
இசைக்காகவே ஊத்துக்காடு
அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க்கொண் டிருந்தபோது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்
ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங் களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
அம்மைநோய் நீக்கும் அம்மன்
வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணு காதேவி அம்மன் வரலாறு.
1 min
July 16-31, 2025
Aanmigam Palan
நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்
தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக “நாகராஜா கோயில்\" திகழ்கிறது.
4 mins
July 16-31, 2025
Aanmigam Palan
அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்
\"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!\" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
வையத்து வாழ்வீர்காள்!
பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
கலக்கம் போக்குவாள் காளராத்ரி
துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!
நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை 'வேண்டாம்' என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
4 mins
July 16-31, 2025
Aanmigam Palan
வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்
தினகரன் ஆன்மிக மலரில் “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்” என்னும் பகுதி வெளியாகி வருகிறது.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!
நாகபஞ்சமி - ஜூலை 29,2025
3 mins
July 16-31, 2025
Translate
Change font size

