कोशिश गोल्ड - मुक्त

பிசுபிசுக்கும் சர்வதேச நீதி கோரல்?

Tamil Mirror

|

August 18, 2025

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முழுமையான மக்கள் ஆதரவு கிடைக்குமா? இல்லையா? என்பதை ஒரு புறம் வைத்துக் கொள்வோம். இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக ஒரு சில தரப்புகளும், ஆதரவு வழங்கமாட்டோம், வழங்கக் கூடாது என்ற வகையில் மற்றொரு தரப்பும் என்று நிலைப்பாடு வெவ்வேறாக இருந்து கொண்டிருக்கிறது.

- லக்ஷ்மன்

வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்த காலத்தில் காணாமல் ஆகப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும், அவர்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அப் போராட்டங்களை நடத்திவருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொருவராக மரணமாகிக் கொண்டு இருக்கின்றனர். இருந்தாலும் அப்போராட்டமானது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டுக்கு கடந்த மாதத்தில் விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரும் அவர்களைச் சந்தித்திருந்தார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதிகளாக இருந்தவர்கள், அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சர்கள் காணாமலாக்கப்பட்டமை என்கிற விடயத்தினை ஏற்றுக்கொள்ளவே அஞ்சி அது தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கும் தயங்கியிருந்தனர். அதனால் அவர்கள் அவ்விவகாரம் குறித்து பேசுவதேயில்லை. அல்லது அவ்வாறு ஒரு தரப்பு இல்லை என்றவாறாகவே கருத்துக்களை வெளியிட முயன்றிருந்தனர். இதற்கிடையில் தான், கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற, ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப். எம். பஸீர் ஆகியோர் எழுதிய 'செம்மணி' புத்தக வெளியீடு மற்றும் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் மனிதப் புதைகுழிகள் எனும் தலைப்பிலான கலந்துரையாடலில் கலந்து கொண்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் வெளியிட்ட கருத்து கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. அவருடைய கருத்து முன்னைய அரசாங்கத்தின் கருத்தா, பெரும்பான்மை மக்களின் சிந்தனையா என்று எண்ணவும் தோன்றுகின்றது.

"இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் இடம்பெற்றன என்ற உண்மையை அரசும், அரசு சாராத சகல தரப்புகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்விவகாரத்துக்கு சர்வதேசத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதொரு விடயமாகும். எனவே, நாம் உள்ளகப் பொறிமுறையை மேலும் பலப்படுத்த வேண்டும்" என்பது அவரது கருத்தாகும்.

Tamil Mirror

यह कहानी Tamil Mirror के August 18, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Tamil Mirror से और कहानियाँ

Tamil Mirror

Tamil Mirror

முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய நெதர்லாந்து

நெதர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் சனிக்கிழமை(30) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் போர்ண்மெத்திடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் இருவர் தாக்கியதில் தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ‘கட்டா' பலி; 'மோண்டா' காயம்

வென்னப்புவ வேவ வீதியில், ஞாயிறுக்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

ரணில் 6ஆம் திகதி விசேட அறிவிப்பு

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, வெள்ளிக்கிழமை(29) அன்று வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

கோட்டாவுக்கு சி.ஐ.டி. அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

கொள்ளையிட்ட நகைகளை விற்று கள்ளக்காதலிக்கு கண்களை மூடிக்கொண்டு செலவழிப்பு

நாவலப்பிட்டி, அங்காடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்கக் கடை மற்றும் தங்க அடகு கடைக்குள் புகுந்து 3.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் உபகரணங்களைத் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

Tamil Mirror

ரூ.2,000 நாணயத்தாள் புழக்கத்திற்கு வரும்

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய நினைவு ரூ.2,000 நாணயத்தாள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை(29) காலை வழங்கப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

பிரித்தானியாவில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் பிரித்தானியாவின் லண்டன் நகரில் சனிக்கிழமை (30) அன்று நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

125ஆவது ஆண்டு நிறைவு இரத்ததான முகாம்

மன்/நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றான இரத்த தான முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை வளாகத்தில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில் சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size