कोशिश गोल्ड - मुक्त

சர்வதேச விவகாரங்களில் நீதி காக்கும் SCO அமைப்பு

Tamil Mirror

|

August 12, 2025

கஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 1 வரை, சீனா தியான்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்தார்.

- சிவபிரகாசம் ரேனுகா

சர்வதேச விவகாரங்களில் நீதி காக்கும் SCO அமைப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிரகாசமான எதிர்காலத்தை ஆராய்வதற்கான ஊடக கரந்துரையாடல் ஒன்று சீன தூதரகத்தில் வியாழக்கிழமை (07) அன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஒகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 1 வரை நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு, சமாதானம் மற்றும் வளர்ச்சி நோக்கி உலகப் போக்கையும், பிராந்திய மக்களின் நிலைத் தன்மை, வளம் மற்றும் ஆழமான பரிமாற்றம், ஒத்துழைப்பிற்கான ஆவலையும் கருத்தில் கொண்டு, சீனா, ரஷ்யா மற்றும் மேலும் நான்கு நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கும் என்ற வரலாற்று முடிவை எடுத்தன. 2009இல் இலங்கை உரையாடல் கூட்டாளராக இணைந்தது. இன்று SCOவில் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகள், 2 பார்வையாளர் நாடுகள், 14 உரையாடல் கூட்டாளர்கள் உள்ளனர்.

இவை உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியையும், யூரேஷிய கண்டத்தின் 60% பரப்பையும் உள்ளடக்கியவை. 2024ஆம் ஆண்டில், சீனா மற்றும் SCO உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள் மற்றும் உரையாடல் கூட்டாளர்கள் இடையிலான வர்த்தகம் 890 பில்லியன் அமெரிக்க டொலர் எனும் சாதனை அளவை எட்டியது. இது SCO அமைப்பின் வலுவான உயிர்ப்பு சக்தியையும், பிரகாசமான எதிர்காலத்தையும் வெளிப்படுத்துகிறது.

Tamil Mirror

यह कहानी Tamil Mirror के August 12, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Tamil Mirror से और कहानियाँ

Tamil Mirror

Tamil Mirror

முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய நெதர்லாந்து

நெதர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் சனிக்கிழமை(30) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் போர்ண்மெத்திடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் இருவர் தாக்கியதில் தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ‘கட்டா' பலி; 'மோண்டா' காயம்

வென்னப்புவ வேவ வீதியில், ஞாயிறுக்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

ரணில் 6ஆம் திகதி விசேட அறிவிப்பு

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, வெள்ளிக்கிழமை(29) அன்று வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

கோட்டாவுக்கு சி.ஐ.டி. அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

கொள்ளையிட்ட நகைகளை விற்று கள்ளக்காதலிக்கு கண்களை மூடிக்கொண்டு செலவழிப்பு

நாவலப்பிட்டி, அங்காடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்கக் கடை மற்றும் தங்க அடகு கடைக்குள் புகுந்து 3.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் உபகரணங்களைத் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

Tamil Mirror

ரூ.2,000 நாணயத்தாள் புழக்கத்திற்கு வரும்

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய நினைவு ரூ.2,000 நாணயத்தாள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை(29) காலை வழங்கப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

பிரித்தானியாவில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் பிரித்தானியாவின் லண்டன் நகரில் சனிக்கிழமை (30) அன்று நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

125ஆவது ஆண்டு நிறைவு இரத்ததான முகாம்

மன்/நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றான இரத்த தான முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை வளாகத்தில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில் சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size