कोशिश गोल्ड - मुक्त
நுரைச்சோலை சவூதி வீட்டுத் திட்டம்; எந்த அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்?
Tamil Mirror
|August 12, 2025
2004 இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசாங்கத்தினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு 13 வருடங்களாக இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படாதிருக்கின்ற நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றிய கருத்துக்கள் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த வீட்டுத் திட்டத்திற்குப் பிறகு நிர்மாணிக்கப்பட்ட எத்தனையோ வீடமைப்புத் திட்டங்கள் பயனாளிகளுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்ட நிலையில், நுரைச்சோலை சவூதி வீட்டுத் திட்டம் மட்டும் இன்னும் காடாகிக் காட்சியளிக்கின்றது.
இப்படி ஆண்டுக்கொரு தடவை அதுபற்றி வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கப்படுகின்றதே தவிர ஆன பலன் ஒன்றுமில்லை.
இந்த விவகாரம் இனவாத நெருக்கடிக்குள் சிக்குண்டு பின்னர் நீதிமன்றம் சென்றது. உயர் நீதிமன்றம் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் வீடுகளைப் பகிர்ந்ததளிக்குமாறு தீர்ப்பளித்தது. ஆனால், இது நியாயமற்றது என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இதுவரை அவ்வீடுகள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை.
நீதிமன்றத் தீர்ப்பை நாம் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆயினும், அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முற்றுமுழுதாக முஸ்லிம்கள் வாழும் அக்கரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மாவட்ட இன விகிதாசாரத்தின் படி, பகிர்ந்தளிப்பதே தார்மீகம் என்ற கருத்துக்கள் முஸ்லிம்களால் முன்வைக்கப்படுகின்றன.
இந்த 500 வீடுகளும் இப்படி யாருக்கும் பயனற்றுக் கிடப்பதை விடவும் எல்லா சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெறும் வகையில் அது பகிர்ந்தளிக்கப்பட்டால் கூடப் பரவாயில்லை என்று இப்போது பெரும்பாலானோர் கருதுகின்றனர். இருப்பினும், அது முஸ்லிம்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் என்பதால், 'பெரிய பங்கு' முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றே முஸ்லிம்கள் கோருகின்றனர். அது ஒருபுறம் இருக்க, இந்த வீட்டுத் திட்டத்தை போல நாட்டில் உள்ள அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்தில் காணப்படும் அரச காணிகளையும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ஏன் அரசாங்கங்கள் பிரித்துக் கொடுக்க முன்வரவில்லை என்ற முக்கியமான ஒரு கேள்வியையும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைத்து வருகின்றனர்.
यह कहानी Tamil Mirror के August 12, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Tamil Mirror से और कहानियाँ

Tamil Mirror
பாதாள உலகக் கோஷ்டியினர் தண்டிக்கப்பட வேண்டும்
நாட்டில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அவ்வாறான சம்பவங்களில் சிலர் பலியாகி விடுகின்றனர். பலர் காயமடைந்து விடுகின்றனர். துப்பாக்கி இயங்காமையால் ஒரு சிலர் தப்பித்துக் கொள்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஒரு சில மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டு விடுகின்றனர்.
1 min
September 02, 2025
Tamil Mirror
“ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்றனர்”
புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்கவோ, மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்கவோ முடியாது போயுள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் சார் பிரச்சினை எழுகிறது. இதற்கும் எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
1 min
September 02, 2025

Tamil Mirror
ஆலயத்தில் கைவரிசை காட்டிய பெண் சிக்கினார்
மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் வைத்து பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
September 02, 2025
Tamil Mirror
ரஷ்ய சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி
ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் பற்றாக்குறையால் எதிர்கால போர்களுக்காக சிறுவர், சிறுமியருக்கு இராணுவ பயிற்சி கொடுத்து தயார் படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.
1 min
September 02, 2025

Tamil Mirror
தொடரைக் கைப்பற்றியது இலங்கை
சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
1 min
September 02, 2025
Tamil Mirror
பிறைட்டனிடம் தோற்ற சிற்றி
ஆர்சனலை வென்ற லிவர்பூல்
1 min
September 02, 2025

Tamil Mirror
மண்டைத்தீவில் கிரிக்கெட் மைதானம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 min
September 02, 2025
Tamil Mirror
"வரி இல்லாவிட்டால் அமெரிக்கா அழிக்கப்படும்"
நீதிமன்ற தீர்ப்புக்கு ட்ரம்ப் பதிலடி
1 min
September 02, 2025

Tamil Mirror
320 பேர் உயிரிழப்பு
உட்கட்டமைப்பு பாரிய சேதம்
1 min
September 02, 2025
Tamil Mirror
“அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும்”
யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் திங்கட்கிழமை (01) காலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
1 min
September 02, 2025
Translate
Change font size