कोशिश गोल्ड - मुक्त
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
Dinamani Tiruchy
|October 11, 2025
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுதொடர்பாக அந்தப் பரிசுக்கான தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
உலக நாடுகளில் ஒப்பீட்டளவில் மக்களாட்சி நாடாக வெனிசுலா வளமாக இருந்தது. தற்போது அது எதேச்சதிகார நாடாக மனிதத்தன்மைக்கு எதிரான நெருக்கடியாலும், பொருளாதார சிக்கலாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் காரிருள் சூழ்ந்து வரும் வேளையில், மக்களாட்சியின் சுடரை அணையாமல் பாதுகாத்து அமைதிக்காகப் பாடுபட்டு வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
அந்நாட்டில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெற வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குரல் எழுப்பத் தொடங்கினார். நாட்டு மக்களின் சுதந்திரத்துக்காக அவர் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார்.
அந்நாட்டில் சுதந்திரமாக தேர்தல் நடைபெற வேண்டும், பிரதிநிதித்துவ அரசு அமைய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் பொது நோக்கமாக உள்ளது. அந்தக் கட்சிகள் ஒரு காலத்தில் ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் சக்தியாக மரியா உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அவர் எதிர்க்கட்சிகளின் அதிபர் வேட்பாளராக இருந்தார். ஆனால், அந்நாட்டு அரசு அவரைப் போட்டியிடவிடாமல் தடுத்துவிட்டது.
यह कहानी Dinamani Tiruchy के October 11, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruchy से और कहानियाँ
Dinamani Tiruchy
உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
27 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
நீலகிரி, கோவை, ஈரோடு உள்பட 27 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
சமரசத்தின் விலை உயிர்களா?
தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2 mins
June 19, 2026
Dinamani Tiruchy
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இடைக்கால நிவாரணம் அறிவிப்பு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Tiruchy
தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல் கட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
1 min
June 19, 2026
Translate
Change font size

