Facebook Pixel மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது | Dinamani Madurai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது

Dinamani Madurai

|

July 02, 2025

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மதுரை, ஜூலை 1: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'ஒரு மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் துறையினர் விசாரணையின் போது நடத்திய தாக்குதலில் அஜித்குமார் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அஜித்குமார் மரணம் குறித்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ராஜராஜன், மாரீஸ்குமார், அருண் சுவாமிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் அமர்வு முன் திங்கள்கிழமை முறையீடு செய்தனர். மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி யளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் ஹென்றி திபேன் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் விசாரணையின் போது முன்னிலையான வழக்குரைஞர்கள், காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தடிமனான நெகிழிக் குழாய்கள், இரும்புக் கம்பிகளால் தாக்கினர் எனத் தெரிவித்து, புகைப்படங்களையும், விடியோவையும் தாக்கல் செய்தனர். பின்னர், வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதம்: காவலாளியைத் தாக்கிய போது, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்தார். காயமடைந்த அஜித்குமாரை சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு உயிரிழந்தார். இந்த நிலையில், விசாரணையை அங்கிருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும். அவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது ஏன்? இது சந்தேகத்தை எழுப்புகிறது.

Dinamani Madurai

यह कहानी Dinamani Madurai के July 02, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Madurai से और कहानियाँ

Dinamani Madurai

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

நீட் தேர்வே ஒரு மோசடிதான்

நீட் தேர்வே ஒரு மோசடி தான் என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு: பிரதமர் தலைமையில் உயர் அதிகார குழு ஆலோசனை

புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!

உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Madurai

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: சாத்விக்/சிராக் இணை வெற்றி

தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size