कोशिश गोल्ड - मुक्त
ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!
Dinamani Karur
|May 19, 2025
2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.
நூறு ஆண்டுகள் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இவ்வளவு பெரிய நாட்டை, இயற்கை வளம், அறிவாற்றல், ஆன்ம பலம் உள்ள மக்களைக் கொண்ட நாட்டை, அப்படியே கொடுத்தால் உலக வல்லரசாகி விடுவார்கள் என பிரிட்டன் காலனிய அரசு நினைத்தது. அதனால்தான், முஸ்லிம்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற, 'முஸ்லிம் லீக்'கின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவை இரண்டாகப் பிளந்தனர். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது.
இதனால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து பல கோடி ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். பல லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால், ஆனந்தக் கண்ணீரோடு பெற வேண்டிய சுதந்திரத்தை, ரத்தக் கண்ணீரோடு பெற்றோம்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப்பிரதமராக, உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் வல்லபபாய் படேலின் உறுதியான நடவடிக்கையால் இன்றைய இந்தியா கட்டமைக்கப்பட்டது. ஆனால், காஷ்மீரின் ஒரு பகுதியை ஆயுதமேந்திய கும்பலை அனுப்பி பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. அத்துடன் நிற்காமல் இந்தியாவின் பிரிக்க முடியாததொரு அங்கமான காஷ்மீர் பள்ளத்தாக்கையும் அபகரிக்கும் நோக்கத்தில் அன்று முதல் இன்று வரையில் பயங்கரவாத செயல்களை அங்கே பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.
'இந்தியாவுடன் நேரடியாக மோதி, ஒரு நாளும் வெல்ல முடியாது' என்பது பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் தெரியும். அதனால்தான், பல பயங்கரவாதக் குழுக்களுக்கு பணம், ஆயுதம், பயிற்சி கொடுத்து அவர்கள் வாயிலாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்து வருகிறது.
பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும்போதெல்லாம், இந்திய அரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிடம், பாகிஸ்தானின் பயங்கரவாதப் பின்னணியை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தும். உலகின் பல முக்கிய நாடுகளிடமும், பயங்கரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தான் துணை நின்றதற்கான ஆதாரங்களை வழங்கும்.
यह कहानी Dinamani Karur के May 19, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Karur से और कहानियाँ
Dinamani Karur
தமிழகம் வழியாக 3 அமிருத் பாரத் விரைவு ரயில்கள்
கேரள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
1 mins
January 24, 2026
Dinamani Karur
தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி
'தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 mins
January 24, 2026
Dinamani Karur
சபரிமலை தங்கக் கவச முறைகேடு: குற்றஞ்சாட்டப்பட்ட நபருடன் பல முறை சந்திப்பு: காங்கிரஸ் மூத்த தலைவர் ஒப்புதல்
தேவஸ்வம் முன்னாள் நிர்வாகத் தலைவருக்கு ஜாமீன்
1 min
January 24, 2026
Dinamani Karur
பியோன் போர்க் சாதனையை சமன் செய்த அல்கராஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
January 24, 2026
Dinamani Karur
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை?
குழு அமைத்தது ஆந்திர அரசு
1 min
January 24, 2026
Dinamani Karur
திமுகவில் இணைந்தார் அமமுக துணை பொதுச் செயலர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முன்னாள் துணை பொதுச் செயலர் கடம்பூர் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
1 min
January 24, 2026
Dinamani Karur
காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்
கேரள சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தை மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் புறக்கணித்தார்.
1 min
January 24, 2026
Dinamani Karur
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் 10 கேள்விகள்
பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் குறிப் பிட்டு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 கேள் விகளை எழுப்பியுள்ளார்.
1 min
January 24, 2026
Dinamani Karur
பிரதமரின் பலவீனத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min
January 24, 2026
Dinamani Karur
இஷான், சூர்யகுமார் அதிரடி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
January 24, 2026
Translate
Change font size

