कोशिश गोल्ड - मुक्त
காலத்தில் கரைந்துவிட்ட கம்பதாசன்
Dinamani Dharmapuri
|October 12, 2025
தாஸ் என்றாலும் தாசன் என்றாலும் பொருள் ஒன்றுதான். இலக்கியத்தில் நாம் முதன்முதல் அறியக்கூடிய தாஸ் வடமொழியில் பல காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாஸ், கன்னடத்தில் புரந்தரதாஸ், ஹிந்தியில் கபீர்தாஸ், என்று பலர் இருந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாடக உலகின் தந்தையென்று போற்றப்படுகின்ற சங்கரதாஸ், திரைப்படத்துக்கு முதலில் பாடல் எழுதிய மதுர பாஸ்கரதாஸ், பி.யு.சின்னப்பா நடித்த ஆரிய மாலா, ஜெகதலப்பிரதாபன் போன்ற படங்களுக்குக் கதை வசனம் எழுதியவரும், எம்.ஜி.ஆர். நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா' என்ற பாடலை எழுதியவருமான கவி லட்சுமண தாஸ் என்று பலர் இருந்திருக்கிறார்கள். ‘கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ வாழ்ந்தாலும் உடலுக்குள்ளே மாரன் உதயமாவது திண்ணம்' என்று அந்தக் கால பூலோக ரம்பை படத்தில் பாடல் எழுதிய புதுக்கம்பன் பூமிபால தாஸ்.
1951-இல் வெளிவந்த சிங்காரி என்ற படத்தில் ‘ஒருசாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா?' என்று பாடல் எழுதிய தஞ்சை ராமையா தாஸ், உலகத்தில் எவரும் எழுதாத அளவில் 800 படங்களுக்கு மேல் வசனம் எழுதி கின்னஸ் சாதனை படைத்தவரும், ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதியவரும், தான் வசனம் எழுதிய நூற்றுக்கணக்கான மொழிமாற்றுப் படங்களில் 55 படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் என்னையே எழுத வைத்தவருமான வசன கர்த்தா ஆரூர்தாஸ், ஆகியோரும் இருந்தார்கள்.
பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ், பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ், தொழில் அதிபர் வி.ஜி.பன்னீர்தாஸ், அரசியல் தலைவர்களில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோரும் பிரபலமானவர்கள்.
அதுபோல், தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களில் பாரதிதாசன், கண்ணதாசன், வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக் கொண்ட சுரதா ஆகியோர் புகழ்பெற்றவர்கள். இதில் சுரதா உவமைக் கவிஞர் என்று புகழ் பெற்றவர். அப்படிப்பட்டவரே புதிய உவமைகளில், புதிய சிந்தனைகளில், புதிய கற்பனைகளில் கம்பதாசன் முதலிடத்தில் இருக்கும் சிறப்புக்குரியவர் என்று பாராட்டியிருக்கிறார். அன்றைய காலத்தில் இந்தியா முழுதும் அறிந்த ஒரே தமிழ்க் கவிஞர் கம்பதாசன்தான் என்றும் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் கண்ணதாசன் சகாப்தம் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலை.
கிளியின் சிவந்த மூக்கிற்கு பச்சை மிளகாய்ப் பழத்தை பாரதிதாசன் உவமை சொல்லியிருப்பார். 'வெற்றிலை போடாமலே வாய்சிவந்த பச்சைப் பசுங்கிளிகள்' என்று பாகவதர் நடித்த அமரகவி படத்தில் எழுதியிருப்பார் சுரதா.
यह कहानी Dinamani Dharmapuri के October 12, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
காஸா போர் நிறுத்தத்துக்குப் பிறகு 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 1,005 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
1 min
June 18, 2026
Dinamani Dharmapuri
குஜராத்தில் விமானத் தயாரிப்பு ஆலை: அதானி, எம்பிரேயர் நிறுவனங்கள் இறுதி
பிரேஸிலின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேயரும் அதானி குழுமமும் இணைந்து, இந்தியாவில் பிராந்திய போக்குவரத்து விமானங்களுக்கான இறுதி ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை குஜராத்தின் தோலேராவில் அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
June 18, 2026
Dinamani Dharmapuri
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Dharmapuri
உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது
அமைச்சர் பெ. விஸ்வநாதன்
2 mins
June 18, 2026
Dinamani Dharmapuri
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Dharmapuri
நிகழாண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்
பிரதமரைச் சந்தித்த பின் உர்சுலா வான்டர் லெயன் அறிவிப்பு
1 mins
June 18, 2026
Dinamani Dharmapuri
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுடன் இரு தரப்பு பேச்சு
கேரள முதல்வர் வி.டி. சதீசன்
1 mins
June 18, 2026
Dinamani Dharmapuri
தூத்துக்குடியில் விரைவில் ரூ.38,000 கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் செயலாக்கம்
முதல்வர் விஜய் ஆலோசனை
1 min
June 18, 2026
Dinamani Dharmapuri
ஐ.நா. பொதுச் செயலாளர் ஹைட்டி பயணம்
ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குட்டெரெஸ் (படம்) அந்நாட்டுக்குப் பயணித்தார்.
1 min
June 18, 2026
Dinamani Dharmapuri
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை
உலகின் மிக முக்கியமான எண்ம (டிஜிட்டல்) மாற்றங்களில் ஒன்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
3 mins
June 18, 2026
Translate
Change font size

