कोशिश गोल्ड - मुक्त
சிக்கலான வளர்ச்சிப் பணிகளைக் கைவிட்டுவிடுவது காங்கிரஸின் இயல்பு
Dinamani Chennai
|September 23, 2025
இடாநகா்: ‘மேற்கொள்வதற்கு கடினமாக இருக்கக் கூடிய எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் கைவிட்டுவிடுவது காங்கிரஸின் இயல்பு; இந்த இயல்புதான் அருணாசல பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
-
மேலும், ‘சாலைகள் அமைப்பதே சாத்தியமில்லாதது என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட இந்த வடகிழக்கு மாநிலங்களில் தற்போது நவீன நெடுஞ்சாலைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’ என்றும் அவா் பெருமிதம் தெரிவித்தாா்.
அருணாசல பிரதேசம் இடாநகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது இக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
அருணாசல பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகள் மட்டும் இருப்பதால்தான், இம் மாநிலத்தில் தனது ஆட்சியின்போது காங்கிரஸ் புறக்கணத்திதற்கான முக்கிய காரணம்.
அதோடு, மேற்கொள்வதற்கு கடினமாக இருக்கக் கூடிய எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் கைவிட்டுவிடுவது காங்கிரஸின் இயல்பு. இந்த இயல்புதான் அருணாசல் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. முழுவதும் மலை மற்றும் வனங்கள் நிறைந்த இந்த பிராந்தியத்தில், வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது மிக சவாலானது. அதன் காரணமாக, இந்த பிராந்தியத்தை காங்கிரஸ் கைவிட்டுவிட்டது.
यह कहानी Dinamani Chennai के September 23, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Chennai से और कहानियाँ
Dinamani Chennai
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம்; இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
அமோனியா கசிவு சம்பவம்: முதல்வரிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, முதல்வர் ஜோசப் விஜய்யிடம், முதல்கட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா
சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகர்வாலை சிபிஐ கைது செய்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
மாமன்றக் கூட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவர் கோரிக்கை
சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் பசுமை எரிசக்தி திட்டங்கள் என்எல்சி இந்தியா-இந்தியன் ஆயில் ஒப்பந்தம்
தமிழகத்தில் பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக என்எல்சி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு
1 min
June 24, 2026
Dinamani Chennai
இந்தியா - அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சு
பியூஷ் கோயல் - ஜேமிஸன் க்ரீயர் பங்கேற்பு
1 mins
June 24, 2026
Dinamani Chennai
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்: வெளியுறவு அமைச்சகம்
'ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன' என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 mins
June 24, 2026
Dinamani Chennai
வெளிநாட்டு நிதியைச் செலவிட என்ஜிஓ-க்களுக்கு கட்டுப்பாடு
அபராதத் தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு
1 min
June 24, 2026
Translate
Change font size
