कोशिश गोल्ड - मुक्त
நெகிழி நெருக்கடி!
Dinamani Chennai
|August 21, 2025
குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நோய் மற்றும் இறப்புகளை நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. மேலும், ஆண்டுதோறும் சுமார் 1.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சுகாதாரம் தொடர்பான பொருளாதார இழப்புகளுக்கும் அவை காரணமாகின்றன.

அன்றாட மக்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட நெகிழி ஒவ்வொரு நாளும் வாழ்க்கையைப் பயமுறுத்தி வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், உலகில் நெகிழியிலான பொருள்களின் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 46 கோடி டன் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் மூன்றில் இரண்டு பங்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடியவைகளாகும். இந்நிலை நீடித்தால், 2060-ஆம் ஆண்டுவாக்கில் நெகிழிப் பொருள்களின் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 96% நெகிழிகள், பெட்ரோலிய வேதிப்பொருள்கள், எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, புதைவடிவ எரிபொருள்களால் தயாரிக்கப்படுகின்றன. நெகிழி உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளும் உள்ளன. ஆனால், உலகிலேயே 90% நெகிழிக் கழிவுகளை உற்பத்தி செய்து இயற்கையையே மாசுபடுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. நெகிழிக் கழிவுகளால் ஏற்படும் மாசுகள் உலகத்தை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கும் இன்றைய சோதனைக் காலத்தில் நெகிழிப் பயன்பாட்டை எப்படி குறைப்பது, தவிர்ப்பது, துறப்பது என்று ஒவ்வொரு நாடும் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.
உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் நெகிழியின் அளவு 1950-ஆம் ஆண்டில் 20 லட்சம் டன்னிலிருந்து 2022-ஆம் ஆண்டில் 47.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2060-ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டில் இருக்கும் நெகிழியின் அளவு மூன்று மடங்குகளாக உயரும். 800 கோடி டன் நெகிழிக் கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதிப்படையச் செய்து வருகின்றன. மேலும், தற்போது அனைத்து நெகிழிப் பொருள்களிலும், 10 சதவீதத்துக்கும் குறைவானது மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
यह कहानी Dinamani Chennai के August 21, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025

Dinamani Chennai
43 லட்சம் மெட்ரிக் டன்ன திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றம்
பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன்ன திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Chennai
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Chennai
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து தொடா்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவா்.
2 mins
September 01, 2025

Dinamani Chennai
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறாா்.
3 mins
September 01, 2025
Dinamani Chennai
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்
1 mins
September 01, 2025

Dinamani Chennai
தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்
தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
1 mins
September 01, 2025

Dinamani Chennai
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Chennai
கபாலீசுவரர் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்
சென்னை கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
September 01, 2025

Dinamani Chennai
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Translate
Change font size