कोशिश गोल्ड - मुक्त
மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன?
DINACHEITHI - NELLAI
|June 22, 2025
சென்னை ஜூன் 22சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்துகணிப்புகளை நடத்தி உள்ளது.
-
234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு :-
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முதல்வராக 30.80 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக 19.97 சதவீதம் பேரும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு 17.38 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கு 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனுக்கு 14.71 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
வருகிற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி, 4-வது இடத்தில் சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
यह कहानी DINACHEITHI - NELLAI के June 22, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - NELLAI से और कहानियाँ
DINACHEITHI - NELLAI
“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு
சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
2 mins
November 16, 2025
DINACHEITHI - NELLAI
அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
1 min
November 16, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2 mins
November 16, 2025
DINACHEITHI - NELLAI
எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும்
கொளத்தூரில் நடந்த முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
November 15, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை பெரியமேட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவல்நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார்
1 min
November 15, 2025
DINACHEITHI - NELLAI
பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1 min
November 15, 2025
DINACHEITHI - NELLAI
10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பாரா?
பாட்னா, நவ. 15காட்டுகிறது. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் | மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் 10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்- மந்திரியாக பதவி ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2 mins
November 15, 2025
DINACHEITHI - NELLAI
இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
November 14, 2025
DINACHEITHI - NELLAI
பீகாரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை
காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும்
1 min
November 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
November 14, 2025
Translate
Change font size
