मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष
The Perfect Holiday Gift Gift Now

ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...

DINACHEITHI - MADURAI

|

July 10, 2025

இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில் அந்த வேனில் இருந்த பள்ளி மாணவர்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேட் கீப்பர் தூங்கிவிட்டார். அவர் ரயில் வரும்போது ரயில்வே கேட்டை மூடவில்லை. அந்த நேரம் பார்த்து பள்ளி வாகனம் ரயில்வே கேட்டை கடந்தபோது ரயில் மோதி இந்த கோர விபத்து நடந்திருக்கிறது என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே அளித்த விளக்கத்தில், பள்ளி வாகனம் வரும்போது ரயில்வே கேட்டை ஊழியர் மூடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது பள்ளி வாகன ஓட்டுநர், ஊழியரிடம் வாகனம் சென்றவுடன் மூடிக் கொள்ளுமாறு கேட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனாலும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. வட இந்திய ஊழியரான கேள்விகளுக்கு தமிழ் தெளிவாகத் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சினையே விபத்துக்கு ஒரு காரணமாக அமைந்து இருக்கலாம் என்று திமுகவும் தெரிவித்துள்ளது. உள்ளூர் மொழி தெரிந்தவர்களையே இந்தப் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

DINACHEITHI - MADURAI से और कहानियाँ

DINACHEITHI - MADURAI

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை

துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - MADURAI

சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - MADURAI

சி, டி. பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ. 3 ஆயிரம்

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - MADURAI

ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - MADURAI

காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் ‘நிம்சுலைடு’ மருந்துக்கு மத்திய அரசு தடை

மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - MADURAI

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்

டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

கிரிபாட்டியில் பிறந்தது புத்தாண்டு: தொடங்கியது கொண்டாட்டம்

இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருந்த போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிட்டது.

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

2026 புதிய ஆண்டு பிறந்தது தலைவர்கள் வாழ்த்து

“சமத்துவம் பொங்கட்டும்., தமிழ்நாடு வெல்லட்டும்”-மு.க. ஸ்டாலின் “மக்களுக்கு நிறைவான சந்தோஷம் கிடைக்கட்டும்” - எடப்பாடி பழனிசாமி

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு

\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.

time to read

1 min

December 20, 2025

Translate

Share

-
+

Change font size