நாம் இழந்த தமிழர் நகரம்; பூப்பாறை!
THEDUTHAL
|24.05.2025
தனுஷ்கோடியிலிருந்து கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையான போடி மெட்டிலிருந்து பதினோராவது கி.மீ-ல் அழகுற அமைந்திருக்கும் ஒரு மலைக்கிராமம்தான் பூப்பாறை. TATAவும், Harrison Malayalam Limited-ம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை வளைத்துப்போட்டு உருவாக்கியிருக்கும் தேயிலைத் தோட்டங்களால் பூப்பாறையைச் சுற்றி எங்கு பார்த்தாலும் ஒரே பசுமைதான். குமுளியிலிருந்து மூணாறு செல்லும் சாலையையும், போடியில் இருந்து மூணாறு செல்லும் சாலையையும், மையப் பகுதியில் இணைக்கும் இந்தப் பூப்பாறை, முன்னொரு காலத்தில் கொட்டக்குடி ஜமீன்தார் வசம் இருந்த ஒரு பகுதி.
இரவு நேரங்களில் பத்து மணியைக் கடந்து நீங்கள் மூணாறு செல்வதாக இருந்தால், கண்டிப்பாக பூப்பாறையில் கட்டன் சாயாவை குடிக்காமல் கடந்து போக முடியாது. அதிலும் பொடிச் சாயாவின் சுவையே தனி. யாரேனும் குமுளியிலிருந்து மூணாறு செல்வதாக இருந்தால்கூட வழி பூப்பாறைதான் என்பதால் இரவும் பகலும் வாகனப் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கிறது.
இந்த அழகிய மலைக்கிராமத்தின் பேச்சுமொழி 1995 வரை தமிழ்தான். யாராவது மலையாளிகள் பூப்பாறையைக் கடக்கும்போது மலையாளம் பேசிக்கொள்வார்கள். மற்றபடி தமிழும் தமிழர்களும் ஈருடல் ஒருயிராகப் பின்னிப்பிணைந்து கிடந்த இந்தப் பூப்பாறையில் இன்றைக்கு மலையாள ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இன்றைக்கு ஐம்பது வயதை நெருங்குகிறவர்களின் காதல் பூந்தோட்டமாக இருந்த பகுதிதான் இந்தப் பூப்பாறை.
1970களில் ஆரம்பித்தது மலையாளக் குடியேற்றம். அதுவரை பூப்பாறையைச் சுற்றிக் கிடந்த அத்தனை ஏலக்காய்த் தோட்டங்களும் தமிழர்களிடத்திலேயே இருந்தது. வீடு வாசலும் அவர்களுடையதே. ஒரு சுதந்திர வாழ்க்கையின் சொர்க்கத்தைச் சொந்தமாய் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.
தாலுகா உடும்பஞ்சோலையாக இருந்தாலும் பூப்பாறை ஒரு தனித்த தேசமாகவே காட்சியளித்தது. பழைய பெரியகுளம் தாலுகாவை அவ்வளவு சீக்கிரம் அவர்கள் மறந்துவிடத் தயாரில்லை. 1956ல் பண்டித நேரு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட மொழிவழிப் பிரிவினை எனும் மோசடி பூப்பாறையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. காரணம் அன்றிலிருந்து இன்றுவரை பூப்பாறையின் மொத்தத் தொடர்பும் போடி நகரோடுதான் இணைந்து கிடக்கிறது. பிழைப்பிற்காக வந்த மலையாளிகளுக்கும் போடியே வணிகத்தலம். 1970 வரை 90 விழுக்காடு தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த இந்தப் பூப்பாறையின் இன்றைய வரலாறு வேறு.
Cette histoire est tirée de l'édition 24.05.2025 de THEDUTHAL.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE THEDUTHAL
THEDUTHAL
காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவுள்ளது.
1 min
28.05.2025
THEDUTHAL
பனை தொழிலாளர்கள் மாநாடு முதலமைச்சர் பங்கேற்கிறார்
வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தகவல்
1 mins
28.05.2025
THEDUTHAL
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இரண்டாவது நாளாக ஆய்வு!
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் / தலைமை செயல் அலுவலர்/ மாவட்ட கண் காணிப்பு அலுவலர் எம். கோவிந்தராவ், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் முன்னிலையில் 26.05.2025 அன்று ஆய்வு மேற்கொண்டார்.
1 min
28.05.2025
THEDUTHAL
விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விழிப்புணர்வு தொடர்பான ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில், சட்டம், ஒழுங்கு போதைப்பொருட்கள் விற்பனையினை தடுப்பது மற்றும் போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
1 min
28.05.2025
THEDUTHAL
TNPSC குரூப் I தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது;
மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
1 min
28.05.2025
THEDUTHAL
கோவையில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் 59 என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.
1 mins
28.05.2025
THEDUTHAL
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் மீட்பு பணியில் தயார் நிலையில் உள்ள மாவட்ட காவல் துறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர்Dr.R.ஸ்டாலின் உத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
1 min
28.05.2025
THEDUTHAL
3 மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர்!
கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.118.33 கோடி மதிப்பில்
3 mins
28.05.2025
THEDUTHAL
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி ஆசியர்களுக்கு பாராட்டு விழா
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில்
1 min
28.05.2025
THEDUTHAL
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
1 min
28.05.2025
Translate
Change font size

