Facebook Pixel எலும்பு உறுதி பெற... | Dinamani Vellore - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

எலும்பு உறுதி பெற...

Dinamani Vellore

|

May 17, 2026

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

- -பா.சுஜித்குமார்

எலும்பு உறுதி பெற...

கொழுப்பு நிறைந்த பேக்கரி உணவுகள், அதிக அளவு சர்க்கரை சேர்த்த பழச்சாறுகள், செயற்கை வேதிப் பொருள்கள் சேர்த்த நொறுக்குகள் போன்றவையும் எலும்புகளின் கால்சியம் அளவைப் பாதிக்கின்றன. இவ்வாறான உணவுகளையும் வளரிளம் பருவத்தினர் தவிர்க்க வேண்டும்” என்கிறார் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ப. வண்டார் குழலி இராஜசேகர்.

அவரிடம் பேசியபோது:

“குழந்தை பிறந்து ஒன்பது மாதம் வரை எலும்பு உருவாக்கம் நிகழும். பின்னர், அதன் நீளம் அதிகரிக்கும். இது தான் சிறு குழந்தையின் உயரம் அதிகரிக்க உதவுகிறது. 10 முதல் 18 வயது வரையில் உச்சத்தில் இருக்கும் எலும்பு வளர்ச்சி, 18 முதல் 20 வயதுக்குள் முடிவடைவதால், வளரிளம் பருவத்தினரின் உயரமும் இந்த வயதில் முடிவுக்கு வருகிறது. இந்த வயதில், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான எந்தவித சத்துகளும் பற்றாக்குறையாக இருக்கக் கூடாது. சத்துகள் பற்றாக்குறை ஏற்பட்டால், வளரிளம் பருவத்தினர் இருக்க வேண்டிய உயரத்தை அடைய மாட்டார்கள். இதனால், வயதுக்கேற்ற உயரம் இல்லாமல், வளரிளம் பருவத்தினரின் உடல் நலனும், மன நலனும் பாதிப்படையும் ஆபத்தும் ஏற்படலாம்.

எலும்பு அடர்த்தி குறைவதால், தேய்ந்து போவதும் எலும்புக்குள் இருக்கும் நுண்ணிய அமைப்புகளான திசுக்கள், சவ்வு, நீர் போன்றவற்றில் அழிவு ஏற்படுவதும் நிகழ்கிறது. மணிக்கட்டு, முதுகெலும்பு, இடுப்புப் பகுதியில் இது மிக விரைவாக அறியப்படுகிறது.

வயதானவர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான எலும்புத் தேய்மான நிலைக்கு வளரிளம் பருவத்தில் இருக்க வேண்டிய எலும்பு உறுதி குறைவாக இருப்பதும் ஒரு காரணம். வளரிளம் பெண்களின் இடுப்பு எலும்புகள் உறுதியாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் இருந்தால் தான், திருமணத்துக்குப் பிறகான குழந்தைப்பேறும் சிக்கல் இல்லாமல் நடைபெறும்.

PLUS D'HISTOIRES DE Dinamani Vellore

Dinamani Vellore

தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!

இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Vellore

முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்

time to read

1 mins

May 17, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Vellore

காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Vellore

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Vellore

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற இரு அணிகளிடையே மோதல்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு புதிய மாவட்டச் செயலர் இரா. பசுபதி, முன்னாள் மாவட்டச் செயலர் சி.வி. சண்முகம் அணியினரிடையே மோதல் எழும் சூழல் நிலவியதால், கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டு, பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.

time to read

1 mins

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size