Facebook Pixel கவலை தரும் கல்வியின் தரம் | Dinamani Vellore - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

கவலை தரும் கல்வியின் தரம்

Dinamani Vellore

|

August 07, 2025

கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மை பெற பாடத்திட்டங்களும் தேர்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.

- டி.எஸ். தியாகராசன்

அமெரிக்க ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலின் இந்திய உறுப்பு அமைப்பான திறன் சோதிப்பு நிறுவனம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய தொழிலாளர்களில் பத்து நபர்களில் ஒன்பது பேர் குறைந்த செயல் திறன் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் திறனை தரவரிசைப் பட்டியலிட்டு மிகக் குறைந்த செயலாற்றும் திறன் உடையவர்களை ஒன்று, இரண்டு என்ற தரத்தில் பிரிக்கிறது. இவர்கள் வீதியில் விற்பனை செய்வோர், வீட்டுப் பணியாளர்கள், கை கால்களைக் கொண்டு தொழில்களை இயக்குவோர் என்று வகைப்படுத்தி உள்ளனர். இந்த மாதிரியான தொழிலாளர்களை வொகேஷனல் பாடப்பிரிவுகளில் சேர்த்து பயிற்சி கொடுத்தாலும் பலன் இல்லை. பிராந்தியவாரியாக பிரித்து பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. அதேநேரத்தில், யூனியன் பிரதேசங்களான சண்டீகர், புதுவை, கோவா மற்றும் கேரளம் போன்ற மாநிலங்கள் செயல்திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிர்கால தொழிலாளர் திறன் குறித்தான வரைபடத்தின் கீழ் நடத்தப்பட்ட தகவல் சேகரிப்பு அட்டவணை 2017-18 முதல் 2023-2024 வரையிலான தகவல் 8.25% பட்டதாரிகள் மட்டுமே அவரவர்களின் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களை மூன்று என்ற தரவரிசையில் சேர்க்கிறார்கள். 88 % தொழிலாளர்கள் மேற்சொன்ன ஒன்று, இரண்டு என்ற தரவரிசைப் பட்டியலின் கீழ் வருகிறார்கள்.

மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயந்த் சௌதரி 50 % பட்டதாரிகள், எழுத்தர், மெக்கானிக், இயந்திரங்களை இயக்குவோர் என்கிறார். 38.23% பட்டதாரிகள் மட்டுமே தொழில் திறன்மிக்கவர்கள் என்ற தரவரிசையான நான்கில் வருகிறார்கள். 28.12 % முதுநிலைப் பட்டதாரிகள் மத்திம தொழில் திறன் உடையவர்கள்.

பொதுவாக, தொழிலாளர்கள் முறையான கல்வியில் நன்கு தேர்ச்சி பெறாதவர்கள். இப்படி கற்ற கல்வி பணியாற்றுவதற்கோ, தொழில் புரிவதற்கோ ஏற்றதாக இல்லை; 'மிஸ் மேச்' என்கிறார் அமைச்சர்.

இதன்மூலம் தெரிய வருகிற உண்மை என்னவென்றால், தொழிலாளர் பணிக்கான தேவைச் சந்தையில் தகுதியானவர்கள் இல்லை என்பதே. தொழில் திறன் தர வரிசையில் உள்ள இரண்டாவது பிரிவினர் ஆண்டு ஊதியத்தில் 5, 6 % அளவில் உயர்வு பெறுகின்றனர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Vellore

Dinamani Vellore

காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Vellore

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Vellore

தவெக அரசு 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வாக்கு தவற வாய்ப்பில்லை என்பதால், தவெக அரசு 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Vellore

ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Vellore

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Vellore

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Translate

Share

-
+

Change font size