Essayer OR - Gratuit
வாசக ஞானம் வளர...
Dinamani Namakkal
|November 10, 2025
பொதுவாக, வாசிப்புத் திறன் குறைந்து விட்டது என்று வருத்தப்படுபவர்கள் அதற்காக மாற்று நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தனி நபர்கள், நிறுவனங்கள் தன்னளவில் செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. வாசிப்பில் ஆர்வம் உடைய நண்பர் ஒருவர் எப்போதும் தன் வரவேற்பறையில், நாளிதழ்களை, வார, மாத இதழ்களை வாங்கி வைத்திருப்பார். தேவையான நேரங்கள் தவிர, தொலைக்காட்சிப் பெட்டி அவர் வீட்டில் ஒளிர்வதே இல்லை.
வந்திருப்பவர்கள் அவசர, அவசியமின்றி, கைப்பேசியைப் பயன்படுத்தினால் ஒழிய அதை அவர் நாகரிகமாகத் தவிர்க்கச் சொல்லிவிடுவார். ஆர்வத்தோடு இதழ்களைப் படிப்பவர்களுக்கு அவகாசம் அளிப்பார்; தேவையெனில், வீட்டுக்குச் சென்று படித்து விட்டுத் தரவும் இசைவார்.
எழுத்தாள நண்பர் ஒருவர், 'திண்ணை நூலகம்' ஒன்றையே தன் வீட்டில் நிறுவிச் செயல்படுத்தி வருகிறார். அழ.வள்ளியப்பாவின் புதல்வி தேவிநாச்சியப்பன், சிறுவர் சங்கத்தின் மூலமாக மாதம் ஒரு முறை தமது இல்லத்தில் சிறார்களையும் பெற்றோரையும் இணைத்து, பேசவும் நடிக்கவும் சொல்லவும் செய்து வருகிறார்.
இதுபோல், இலக்கிய ஆர்வம் உடைய மருத்துவர்கள், ஜோதிடர்கள், பொதுமக்கள் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் அமைத்திருப்பவர்கள் தங்களின் வரவேற்பறையில் காத்திருப்பவர்களுக்காக நாளிதழ்களையும், பருவ இதழ்களையும், நூல்களையும் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நாள்தோறும் நாளிதழ்களை வாங்கி வாசகர்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் ஆக்கிக் கொள்ள உதவும் 'மெஸ்களும்' இருக்கின்றன. சில நாள்களில் மதிய உணவு வேளைகளில், சோறு தீர்ந்துவிட்ட நிலையில் மறு உலைவைத்து ஆகும் வரை பொறுத்திருந்து உண்பவர்களாக வாடிக்கையாளர்கள் காத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். அந்த வேளைகளில் அவர்களது பொறுமைக்கும் பசிக்கும் விருந்தளிப்பதாக, தினமணி உள்ளிட்ட நாளிதழ்கள் வைக்கப் பெற்றிருக்கின்றன. புதுவை மெஸ் ஒன்றில், இந்த வழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.
'காலை வேளையில் இல்லப் பணிகள், அலுவலகத்துக்குக் கிளம்புதல் ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நாளிதழ்களைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை. மாலைக்குப் பிறகு, அன்றையச் செய்திகள் பழையதாகி விடுகின்றன. எனவே, மதிய வேளையில் உணவுக்கு இடையில், செய்திகள் படிக்க ஏதுவாக இந்தச் சூழல் இருக்கிறது' என்கிறார் வாடிக்கையாளர் ஒருவர்.
'தொடங்கிய காலத்தில், அதிகம் செய்தித் தாள்கள் கிடைக்காத போது, அவற்றைப் படிப்பதற்காகவே, எங்கள் மெஸ்ஸுக்கு வருவார்கள். அப்போது தொடங்கிய பழக்கம், இப்போதும் நடைமுறையில் உள்ளது' என்று அந்த மெஸ் உரிமையாளர் குறிப்பிடும்போது, ஒருவிதப் பெருமிதம் அவர்தம் முகத்தில் தவழ்ந்தது.
Cette histoire est tirée de l'édition November 10, 2025 de Dinamani Namakkal.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Namakkal
Dinamani Namakkal
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
December 04, 2025
Dinamani Namakkal
ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்
தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.
1 mins
December 04, 2025
Dinamani Namakkal
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Namakkal
திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயர மலை உச்சியில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
1 mins
December 04, 2025
Dinamani Namakkal
ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Namakkal
16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Namakkal
6 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 4) 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Namakkal
உள்ளூர் மொழியறிதல் அவசியம்!
அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.
2 mins
December 04, 2025
Dinamani Namakkal
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
December 04, 2025
Dinamani Namakkal
4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை
தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
1 min
December 04, 2025
Listen
Translate
Change font size
