Essayer OR - Gratuit

அரிய பண்புகளின் தலைமகன்

Dinamani Coimbatore

|

July 15, 2025

காமராஜ் அதிகார ஆணவமோ, பதவி மோகமோ இல்லாத எளிய, இனிய மனிதர்; தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் ஓயாது உழைத்தவர்; ஆகவேதான், மக்கள் மனங்களில் என்றும் வாழ்கிறார்.

- முனைவர் அ.பிச்சை

வொஹர்லால் நேரு 1964-இல் நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டம். அப்போது, மேலைநாட்டுப் பத்திரிகையாளர்களில் சிலர், நேருவுக்குப் பிறகு இந்தியா சிதறுண்டு போகும் என்றார்கள்; ஆனால், வேறு சிலர் இந்தியா சிதறாமல் நிற்கலாம் என்றாலும், அங்கு ஜனநாயகம் நீடிக்க வாய்ப்புகள் குறைவு என்று ஆரூடம் கூறினர்.

அதைப் பொய்யாக்கி, இந்தியாவில் ஒற்றுமையையும், ஸ்திரத்தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் உறுதி செய்ததில் அன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அவர்களில், முதன்மையானவராகக் குறிப்பிடப்பட வேண்டியவர் கு.காமராஜ். ஆனால், இன்று அவர் தமிழ்நாட்டைத் தவிர்த்து- தேசத்தின் பிற பகுதிகளில் மறக்கடிக்கப்பட்ட தலைவராக ஆகிவிட்டாரே! என்று கவலையுடன் பதிவு செய்திருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜ் பதவி வகிக்கிறார். அது சமயம் நேரு தன் வீட்டில் நலிந்த நிலையில், ஓய்வு எடுத்து வருகிறார். அவரை காமராஜ் சந்திக்கிறார்.

‘ஐயா! எனக்கு உங்கள் அறிவுரை தேவை. உங்களுக்கு முழுமையான ஓய்வு தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி நீங்கள் ஓய்வில் இருந்தால், உங்கள் பொறுப்பை நாங்கள் யாரிடம் கொடுப்பது? எனக் கேட்கிறார் காமராஜ். அதற்கு நேரு; ‘சாஸ்திரியை வைத்துப் பாருங்கள்’ என்கிறார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின்னால், ‘இந்திரா காந்தியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று காமராஜ் கேட்க, அதற்கு நேரு தந்த பதில்; ‘இப்போது வேண்டாம்’ என்பதாகும்.

அதன் பிறகு, சென்னை திரும்பிய காமராஜ், தன் நம்பிக்கைக்குரிய சகா வான சட்டப்பேரவைத் தலைவர் செல்ல பாண்டியனிடம் இந்த உரையாடலைப் பகிர்ந்து கொள்கிறார்.

அத்துடன் சேர்த்து, காமராஜ் பேரவைத் தலைவரிடம், “பாண்டியன்! இந்திரா காந்தியின் பெயரை நான் சொன்னவுடன், தலைவர் நேரு, ‘இப்போது வேண்டாம்’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘வேண்டாம்’ என்று சொல்லவில்லை! ஆகவே, நம் தலைவர் மனதில் இந்திரா காந்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இது எனது ஊகம்’ என்றாராம்.

இவ்வாறு தன் தலைவனின் ஆழ்மனத்தில் கிடந்த எண்ணத்தை, தானே கேட்டறிந்து, அப்படியே முதலில் சாஸ்திரி, அடுத்து இந்திரா என்று நிறைவேற்றிக் காட்டிய தூய்மையான தேசத் தொண்டர் காமராஜ்.

PLUS D'HISTOIRES DE Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஆண்ட்ரீவா, போகோ காலிறுதிக்கு முன்னேற்றம்

அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கனடாவின் விக்டோரியா போகோ ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

January 14, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தமிழகத்துக்கு தனி செயற்கை நுண்ணறிவு மையம்: ரூ.10,000 கோடியில் சென்னையில் அமைக்க ஒப்பந்தம்

தமிழகத்துக்கு தனியாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையத்தை சென்னையில் ரூ.

time to read

1 min

January 14, 2026

Dinamani Coimbatore

குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்

time to read

1 mins

January 14, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

time to read

1 min

January 14, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது; பெரியார், காமராஜர், பாரதியார் விருதுகளும் அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படவுள்ளது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Coimbatore

ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Coimbatore

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!

time to read

2 mins

January 14, 2026

Dinamani Coimbatore

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செயல்பட்ட 42 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை 'சீல்' வைக்கப்பட்டது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஜனநாயகன் திரைப்பட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Coimbatore

மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.

time to read

2 mins

January 13, 2026

Translate

Share

-
+

Change font size