Essayer OR - Gratuit
எங்கு போய் முட்டிக்கொள்வது?
Dinamani Chennai
|February 28, 2025
இந்திய மக்களிடையே கருத்துக் கலப்புக்கு ஆங்கிலம் வழி வகுத்தது. விடுதலைப் போராட்டத்தை நடத்திய மொழியே ஆங்கிலம்தான். எந்த மொழி இந்தியாவை இணைத்த மொழியோ, அந்த மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருப்பதுதான் நியாயம்.
கல்வி என்பது முற்றிலும் மாநில அரசின் பொறுப்பிலேயே இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் அது இணை அதிகாரப் பட்டியலுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டது. அது குறித்து தமிழ்நாட்டை ஆண்டவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக முணுமுணுக்கக் கூட இல்லை. அதற்குப் பிறகு கங்கையிலே பெருவெள்ளம் ஓடி வடிந்தும் விட்டது.
இந்தியையும் கற்க வேண்டும்; அதுவும் கட்டாயம் என்னும் நிலை தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டு, அதற்குப் பேரெதிர்ப்பு கிளம்பி, அது இங்கே கிடப்பில் போடப்பட்டது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. கல்வி வழியாகத்தானே இந்தி ஊடுருவ முடியும்?
ஆயினும் இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்னும் மைய அரசின் நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை. ஆகவே அது இந்தி பேசாத மக்களின் தலைமீது என்றென்றும் தொங்கிக்கொண்டிருக்கிற வாளாகவே இருந்து வருகிறது.
இந்தியா ஒன்றாக இருந்த நாடில்லை. அதைத் தன் துப்பாக்கி முனையில் இணைத்தான் வெள்ளைக்காரன். அப்போதும் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் அயலாகவே இருந்தனர். ஆங்கிலக் கல்வியைப் புகுத்தினான் வெள்ளைக்காரன். இந்திய மக்களிடையே கருத்துக் கலப்புக்கு ஆங்கிலம் வழி வகுத்தது. விடுதலைப் போராட்டத்தை நடத்திய மொழியே ஆங்கிலம்தான். அதுதான் வெள்ளையனின் அதிகாரத்தைத் தாண்டி காஷ்மீரையும் குமரி முனையையும் மனக்கலப்பாலும் கருத்துக் கலப்பாலும் ஒருமைப்படுத்தியது.
எந்த மொழி இந்தியாவை இணைத்த மொழியோ, அந்த மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருப்பதுதான் நியாயம். அதுதான் இந்தியாவைச் சிதறாமல் காக்கும்.
வெள்ளைக்காரன் போகும்போது இந்தியா சிதறிவிடுமோ என்று காந்தி அஞ்சினார்.
இந்தியா சிதறாமல் காத்தது காந்தியின் மொழிவழித் தேசியக் கொள்கைதான். இதை 1920-இலேயே நடைமுறைப்படுத்தி விட்டார் காந்தி. தமிழ்நாடு காங்கிரசு, வங்காளக் காங்கிரசு என்று பிரித்துக் காட்டி, நாளைய இந்தியா இதுதான் என்று அடையாளப்படுத்தி, நாட்டைச் சிதறவிடாமல் காத்தவர் காந்திதான்.
Cette histoire est tirée de l'édition February 28, 2025 de Dinamani Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Chennai
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Translate
Change font size

