Essayer OR - Gratuit
வேலையில்லா திண்டாட்டம் - தீரும் !
Dinamani Chennai
|August 10, 2024
2024 நாடாளுமன்றத் தோ்தல் அறிக்கையில் தேசியக் கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சி இரண்டுமே வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் தந்து குறிப்பிட்டிருந்தன.
-
இப்போதைய உண்மை நிலை, படிப்புக்கு ஏற்ற நிரந்தரமான வேலை என்பது பலருக்குக் கிடைக்கவில்லை என்பதுதான்.
பிரதமா் மோடியே வேலைவாய்ப்புகள் பற்றி தனது கவலையை தோ்தல் சமயத்தில் மக்களிடம் பகிா்ந்து கொண்டிருக்கிறாா். ‘சென்ற 2019 தோ்தலில் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு என்று கணக்கிட்டு, ஐந்தாண்டுகளில் பத்து கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன். கடந்த ஆறு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளில் ஆறு கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே ஏற்படுத்தி தர முடிந்தது’ என்று குறிப்பிட்டு இருந்தாா். அவா் தந்த வாக்குறுதியான 10 கோடி வேலைவாய்ப்பில் பாதியை மட்டுமே அவரால் நிறைவேற்ற முடிந்தது என்பதையும் அவா் ஒப்புக் கொண்டிருக்கிறாா்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது வேலை தேடுபவா்கள்
தொழில்முனைவராவது அதிகரித்துள்ளது என்பதும் உண்மை. இதை மேலும் அரசு ஊக்கப்படுத்த முன்வர வேண்டும். வேலையற்றோா் எண்ணிக்கை குறைப்பதற்கு இதுவும் ஒரு நல்ல வழி.
வேலை வாய்ப்பின்மை குறித்த தரவுகளை மாதந்தோறும் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது என்ற அறிவிப்பு, மத்திய அரசு இப்போது வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கையாகத்தான் நான் பாா்க்கிறேன். ஒரு நாட்டில் நிரந்தரமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் அதிகப்படியான மனித உழைப்பை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
மத்திய நிதியமைச்சா் 2024-2025 பட்ஜெட்டில் 4 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும் கல்வி, தொழில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறாா். நாடாளுமன்றத்தில் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஒரு தகவலை பகிா்ந்துள்ளாா். 2017- 2018இல் வேலையில்லாதவா்கள் எண்ணிக்கை ஆறு சதவீதமாக இருந்தது. தற்போது அது 3.2% குறைந்து விரைவில் அது 3% குறைய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடுகிறாா்.
Cette histoire est tirée de l'édition August 10, 2024 de Dinamani Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Chennai
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Translate
Change font size

