Essayer OR - Gratuit

ஏழைத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாம் தாய் நாடு...

DINACHEITHI - NELLAI

|

May 23, 2025

தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறி இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 2018ம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது அவரது தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும், தண்டனைக் காலம் முடிந்ததும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், "அகதிகள் முகாமிலேயே 3 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய மனைவியும், குழந்தைகளும் இங்கேயே தங்கி உள்ளனர். தாய் நாடான இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, எனது தண்டனையை ரத்து செய்வதோடு, இந்தியாவிலேயே தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஏற்கெனவே இங்கு 140 கோடி மக்களுடன் போராடி வருகிறோம். உலக நாடுகள் பலவற்றிலிருந்து இங்கு பலர் வந்து அகதியாகத் தங்கி வருகின்றனர். அனைவரும் வந்து தங்குவதற்கு இது தர்ம சத்திரம் கிடையாது.

உலக அகதிகள் அனைவரும் இங்கு வந்து தங்கலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளதா ? அனைத்து வெளி நாட்டினரையும் இங்கு தங்க வைக்க முடியாது. இங்கு அகதியாக வந்து தங்கியிருக்க உங்களுக்கு உரிமை கிடையாது. தண்டனைக் காலம் முடிந்ததும் இங்கு தங்கியிருக்க முடியாது. நீங்கள் வேறு நாட்டுக்குச் செல்லலாம்" என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தனர்.

PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

December 03, 2025

DINACHEITHI - NELLAI

நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - NELLAI

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - NELLAI

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - NELLAI

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்

மு.க.ஸ்டாலின் பேட்டி

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்

சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

November 29, 2025

DINACHEITHI - NELLAI

சென்னைக்கு 410 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல்: மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - NELLAI

சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது

time to read

2 mins

November 29, 2025

DINACHEITHI - NELLAI

நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம்

சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், நடிகர் சிவக்குமார், ஓவியர் குருசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

time to read

1 mins

November 29, 2025

Translate

Share

-
+

Change font size