Intentar ORO - Gratis
திருவக்கரை வக்ரகாளி அம்மன்!
Penmani
|April 2025
காளி உருவம் காளி என்றாலே நமக்குள் ஒரு பயம் வருகிறது. உக்கிரமானவள். ஆக்ரோஷமானவள் என்று தான் நினைக்கிறோம்.
காளியின் மகிமை: அவளுடைய தோற்றமே அச்சமூட்டுவதாக உள்ளது. ஆனால் அவள் தீயவர்களுக்கு மட்டும்தான் பயங்கரமானவள். தன்னை நம்பும் பக்தர்களுக்கு அன்பான தாய் போன்றவள். பிரம்ம சக்தியாக விளங்கும் அவளே அனைத்துக்கும் ஆதாரமாக விளங்குகிறாள்.
பிரம்மசக்தி: பிரம்மம் அசைவில்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தின் காரியங்களைச் செய்யும் சக்தியே பராசக்தி. தட்சிணாமூர்த்தியாக யோக நிஷ்டையில் ஈசன் அமர்ந்திருக்கும் போது அவர் உள்ளிருக்கும் அம்பிகை வெளிப்பட்டு துஷ்டர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகிறாள். அம்பிகையே பரமாத்மா. அனைவருக்குள்ளும் இருந்து சக்தியைத் தருபவள். அவளின் அபாரமான சக்தியை வெளிப்படுத்துவது காளி ரூபம்.
அவதாரங்கள் எல்லாம் மனிதர்களை நல்வழிப் படுத்தவே உண்டாகின்றன. தன்னை நம்பி வருபவர்களை காக்கவே அவள் காளி அவதாரமும் எடுக்கிறாள். காளி என்றாலே பயமும், நடுக்கமும் உண்டாகும் நம் மனதில். ஆனால் அவளை உபாசிக்க நாளடைவில் பயம் நீங்கி அவளிடம் ஒரு பக்தியும், ஈடுபாடும் உண்டாகி விடும். துஷ்ட நிக்ரகம் காரணமாகவே அம்பிகை எடுத்த அனைத்தும் நான் எனும் காளியைப் புரிந்து கொண்டால் அவளிடம் பயம் ஏற்படாது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக அங்கு கோவில் கொண்டிருக்கிறாள்.
அம்பிகையின் ரூபம்:
இங்கு அம்பிகை அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை என்ற திருப்பெயர்களுடன் காட்சி அளித்தாலும் அவளின் காளி சொரூபமே மிகப் பிரசித்தம். குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் என்ற அசுரனை அழிக்க ஈசனிடம் வரம் பெற்று, அன்னை காளியாக அவதாரமெடுத்து அவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றாள். சிவபெருமானை நோக்கி உக்கிர தவம் இருந்த வக்கிராசுரன் அவரிடமிருந்து ஏராளமான வரங்கள் பெற்றான். அதனால் ஆணவம், தான் என்ற செருக்கு அடைந்த அவன் பல கொடுமைகள் செய்தான். மக்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்களை அடிமைப்படுத்தி எண்ண முடியாத அக்கிரமங்கள் செய்தான்.
Esta historia es de la edición April 2025 de Penmani.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Penmani
Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025
Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025
Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025
Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025
Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025
Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025
Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size
