Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año
The Perfect Holiday Gift Gift Now

மானமிகு கலைஞருடன் — ஒரு நேர்காணல்

Viduthalai

|

JUNE 2,2025

கேள்வி: வணக்கம்! இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினுடைய முக்கியத் தலைவராகிய தங்களிடத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய 107ஆவது ஆண்டு பிறந்தநாள் மலருக்காகவும், "விடுதலை" பொன்விழா மலருக்காகவும் ஒரு நேர்முகப் பேட்டிக்காக வந்திருக்கிறோம். இந்த அரிய வாய்ப்பைப் பெற்றதற்காக எங்களுடைய நிறுவனத்தின் சார்பாக அன்பான நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துப் பேட்டியைத் தொடங்குவதற்கு அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மானமிகு கலைஞருடன் — ஒரு நேர்காணல்

கலைஞர்: வரவேற்கிறேன், பேட்டியைத் தொடருங்கள்.

கேள்வி: தந்தை பெரியாரவர்கள்பால் தாங்கள் ஈர்க்கப்பட்ட நிகழ்ச்சி எது?

பதில்: 1945ஆம் ஆண்டில் 'நாகை திராவிட நடிகர் கழகம்' என்ற பெயரால் கொள்கைப் பிரச்சார நாடகங்களை நடத்தி வந்தோம். நாகை கழகச் செயல்வீரர் ஆர்.வி.கோபால் அவர்களால் அது நிறுவப்பட்டது. கொள்கை பிரச்சாரத்திற்காக நானும் கதைகளை எழுதி, உரையாடல்கள் அமைத்து நடிக்கவும் செய்தேன். அப்படி நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் புதுவையில் செட்டியார் பேட்டையில் அந்நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. புதுவையில் ஒரு நாள்! அதன் காரணமாக ஸநாதனிகள் - வைதிகர்கள் எதிர்ப்புக்கு நாங்கள் ஆளாக நேரிட்டது. அந்த நேரத்தில் புதுவையில் திராவிடர் கழகத்தினுடைய மாநாடு ஒன்றை நடத்தினோம். அந்த மாநாட்டில் நானும் பங்குகொண்டு பணியாற்றிக்கொண்டிருந்தேன். தந்தை பெரியாரவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அந்த மாநாட்டை முன்னின்று நடத்தினார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த மாநாட்டில் பெரும் கலவரம் ஏற்பட்டு அதன் காரணமாக நாங்களெல்லாம் விரட்டப்பட்டு, தாக்கப்பட்டு, நான் இறந்துவிட்டேன் என்று எதிரிகள் கருதி ஒரு சாக்கடையிலே தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். என்னைக் காணவில்லையென்று தந்தை பெரியாரவர்கள் இரவெல்லாம் தேடி, -இறுதியாக ஒரு வீட்டில் நான் பிரக்ஞையற்ற நிலையிலேயிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். அங்கேயிருந்து என்னை அழைத்து வந்து, என்னுடைய நெற்றியிலிருந்த காயங்களுக்கெல்லாம் அவர் தன்னுடைய கையால் மருந்து தடவினார். அப்படி மருந்து தடவுகிற பொழுது அய்யா அவர்கள் சொன்னார்கள், "யார் யார் பெற்ற பிள்ளைகளோ என்னுடைய கொள்கைகளுக்காக இப்படிக் கஷ்டப்படுகிறார்கள்” என்று சொன்னார்கள். நான் மாநாட்டிலே தாக்கப்பட்டு, சாக்கடையிலே தூக்கி வீசப்பட்டு அதன் காரணமாகப் பெற்ற வலியெல்லாம் மறந்து போயிற்று. அப்போது தந்தை பெரியாரவர்களிடத்தில் ஒரு தந்தை பாசத்தை, தாயின் அன்பை நான் உணர்ந்தேன்.

கேள்வி: 'குடிஅரசி'ல் பணியாற்ற தந்தை பெரியார் குருகுலத்தில் இருந்தபோது தங்கள் வயது என்ன? அந்தக் காலத்தில் 'குடிஅரசி'ல் எழுதியதில் இப்போதும் உங்கள் மனத்தில் நீங்காமல் இருக்கும் படைப்பு எது?

“தீட்டாயிடுத்து” “அண்ணாமலைக்கு அரோகரா!”

MÁS HISTORIAS DE Viduthalai

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்

மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

time to read

1 mins

JUNE 06,2025

Viduthalai

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு

அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

Viduthalai

முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து

காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்

வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

Viduthalai

ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:

வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது

இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

time to read

1 min

JUNE 06,2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back