Intentar ORO - Gratis
தண்டனை விலக்கீடே நாட்டை அழிவை நோக்கி எடுத்துச் செல்கிறது
Tamil Mirror
|July 16, 2025
ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராகக் கடமையாற்றிய வைத்தியர் மஹேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டதை அடுத்து அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக இருக்கும் மருந்துக்கள் அல்லது மருத்துவ கருவிகளை வெளியில் இருந்து கொண்டு வருமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரை செய்ய மருத்துவர்கள் தயங்குவதாக சில மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறு பரிந்துரை செய்வதன் மூலம் தாமும் மருத்துவர் விஜேரத்னவைப் போல் கைது செய்யப்படலாம் என்று மருத்துவர்கள் அச்சமடைந்துள்ளதாக அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது நியாயமற்ற சந்தேகமாகும். அல்லது மேற்படி நரம்பியல் நிபுணர் கைது செய்யப்பட்டதற்குத் தெரிவிக்கும் ஒரு வித எதிர்ப்பாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
குறிப்பிட்டதோர் மருந்தையோ அல்லது மருத்துவ உபகரணத்தையே வெளியில் இருந்து கொண்டு வருமாறு பரிந்துரை செய்ததற்காக இந்த நரம்பியல் நிபுணர் கைது செய்யப்படவில்லை. அவர் மட்டுமல்லாது, மேலும் ஆயிரக் கணக்கான மருத்துவர்கள் வெளியில் இருந்து மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் கொண்டு வருமாறு பரிந்துரை செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் கைது செய்யப்படவில்லை.
தமது அதிகாரத்தைப் பாவித்து ஜெயவர்தனபுர மருத்துவமனைக்குப் போதியளவில் குறிப்பிட்டதோர் மருத்துவ உபகரணத்தைக் கொள்வனவு செய்வதைத் தடுத்து அம்மருத்துவமனையில் அந்த உகரணத்துக்கான தட்டுப்பாட்டைச் செயற்கையாக உருவாக்கி தமக்குத் தொடர்புள்ள ஒரு மருந்தகமொன்றிலிருந்து மும்மடங்கு அல்லது நான்கு மடங்கு அதிக விலைக்கு நோயாளர்கள் அவ்வுபகரணத்தை கொள்வனவு செய்யும் நிலையை உருவாக்கி நியாயமற்ற முறையில் பணம் சம்பாதித்தார் என்பதே அந்நரம்பியல் நிபுணருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டாகும்.
இதுவும் சாதாரணமாக மருத்துவர்கள் குறிப்பிட்டதோர் மருந்தகமொன்றை பரிந்துரை செய்யாது வெளியில் இருந்து மருந்துகளை அல்லது மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்து கொண்டு வருமாறு கூறுவதும் ஒன்று அல்ல. எனவே, சாதாரணமாக வெளியில் இருந்து மருந்து அல்லது மருத்துவ உபகரணங்களைக் கொண்டு வருமாறு சிபாரிசு செய்யும் மருத்துவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இது சில மருத்துவ சங்கங்கள் அநாவசியமாக மருத்துவர்கள் மத்தியில் பரப்பும் அச்சமாகும். அதேவேளை, அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக இருக்கும் மருந்துகளை வெளியில் இருந்து கொண்டு வருவதை நிறுத்தப் போகும் ஒரு அச்சுறுத்தலும் மருத்துவ சங்கங்களின் இந்த அறிக்கையில் பொதிந்திருக்கிறது. எனவே, இது இந்த நரம்பியல் நிபுணர் செய்ததாகக் கூறப்படும் குற்றத்தை நியாயப்படுத்த எடுக்கும் முயற்சியாகவும் சந்தேகிக்கலாம்.
Esta historia es de la edición July 16, 2025 de Tamil Mirror.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
