Intentar ORO - Gratis
வங்கிகளின் சேவைத் தரம் தொடரட்டும்!
Dinamani Vellore
|June 28, 2025
வங்கிகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுவரும் எண்ம புரட்சியில் பல பழைமை அனுபவங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. காணாமல் போனதில் முக்கியமானது, வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே நிலவிய தனிப்பட்ட தொடர்பு (பர்சனல் டச்) என்ற பாலமாகும்.
சமுதாயத்தில் குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு மட்டும் வங்கிசார்ந்த வசதிகள் என்ற சித்தாந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அந்த வசதிகளை அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கும் வகையில் பரவலாக்கப்பட்டது, நம் பொருளாதார சரித்திரத்தில் ஓர் அரிய நிகழ்வாகும்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றம், அனைத்துத் தரப்பினரையும் சார்ந்ததாக இருத்தல் வேண்டும் என்ற காந்திய கொள்கைக்கு இந்த நிகழ்வுகள் வலுசேர்த்தன.
குடிசைத் தொழில் முதல் விவசாயத் துறை வரையிலான பயனாளிகள், நாளுக்குநாள் பெருகிவருவது வங்கித் துறையின் பயன்பாடுகள், சமுதாயத்தில் பெரும்பாலான வர்களைச் சென்றடைந்ததற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
உலக பொருளாதார தளத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நம் நாட்டின் பிரதிபிம்பமாக வங்கிகளின் செயல்பாடுகள் பார்க்கப்படுகின்றன.
வங்கிகளின் செயல்பாடு, இருசக்கர வாகனத்தைப் போன்றது. சேமிப்பாளர்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாக பெற்று, தேவைப்படுவோருக்கு, அந்தப் பணத்தை கடனாக வழங்கி, லாபம் ஈட்டுவதுதான் வங்கிகளின் அடிப்படைச் செயல்பாடாகும்.
இந்தச் செயல்பாட்டில், சக்கரங்களின் வேகசுழற்சி ஒன்றுக்கொன்று ஈடு கொடுத்து, வாகனம் தடையின்றி நகர்வதற்கு வழிவகுக்க வேண்டும். அந்த செயல்பாடுகளில், எந்த பக்கம் சுணக்கம் ஏற்பட்டாலும், அது வங்கித் துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
எடுத்துக்காட்டாக, கடன் தேவைகளுக்கு ஏற்றபடி டெபாசிட் தொகை வளரவில்லை என்றால், அந்த குறையை நிறை செய்ய வங்கிகள் மற்ற நிதி ஆதாரங்களை அணுக வேண்டி இருக்கும்.
சில சமயங்களில் அவற்றுக்கான செலவினங்கள் அதிகமாக இருக்கலாம் அல்லது சில நிதிஆதாரங்களின் காலக்கெடு தேவைக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கலாம். இதனால், வங்கிகளின் லாபம் பாதிப்படைவதுடன், அவற்றின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படும்.
Esta historia es de la edición June 28, 2025 de Dinamani Vellore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Vellore
Dinamani Vellore
அரசின் கடனும் மக்களின் கடனே!
ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.
2 mins
January 05, 2026
Dinamani Vellore
வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1 min
January 05, 2026
Dinamani Vellore
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
Dinamani Vellore
பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
January 05, 2026
Dinamani Vellore
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Vellore
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Dinamani Vellore
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Vellore
தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 mins
January 05, 2026
Dinamani Vellore
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Vellore
வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
January 05, 2026
Translate
Change font size
