Intentar ORO - Gratis
சுற்றுச்சூழல் சிதைந்தால் சுற்றுலா இல்லை!
Dinamani Tiruvallur
|June 12, 2025
சுற்றுலாப் பயணிகளைப் பொருத்தவரை பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. தீவிர கண்காணிப்பும் கடும் அபராதமும் மட்டுமே சுற்றுலாப் பயணிகளைப் பொறுப்புடன் செயல்பட வைக்கும். ஆனால், சுற்றுலாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதங்கள் அனைத்தையும் தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிப்பது என்பது முடியாத காரியம்.
மத்திய-மாநில அரசுகள் எல்லாமே சுற்றுலாவை மேம்படுத்த அதிக முயற்சிகள் எடுத்து வருகின்றன. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி ஒரு கடமையாக, அருகாமை-தொலைவு என்றெல்லாம் பார்க்காமல், கூட்டம் கூட்டமாக சுற்றுலாத் தலங்களை மக்கள் முற்றுகையிடுகிறார்கள்.
மலைப்பிரதேச சுற்றுலா, கோடைக்கால சுற்றுலா, குளிர்கால சுற்றுலா, மழைக்கால சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கல்வி சுற்றுலா, கலாசார சுற்றுலா, சூழல் சுற்றுலா, கானுயிர் சுற்றுலா-என சுற்றுலா ஒரு பெரும் வணிகமாக மாறிவிட்டது.
இச்சுற்றுலா வணிகத்தினால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால், அரசுகளோ, அதிகாரிகளோ, பொதுமக்களோ இதைப் பற்றிச் சற்றும் கவலைகொள்ளவில்லை என்பது மிகப் பெரிய சோகம்! ஒரு பக்கம் 'காலநிலை மாற்றம்', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்றெல்லாம் பல்வேறு நாடுகள் கூட்டம் போட்டு, கருத்தரங்குகள் நடத்தி, விவாதம் செய்கின்றன.
மறுபக்கம் 'சுற்றுலா' என்ற பெயரில் எல்லா நாடுகளுமே சுற்றுச்சூழலைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளில் மக்கள்தொகை குறைவு; சீனா, ஜப்பான் போன்ற அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்; சுற்றுலாவுக் கான கட்டணம் மிக அதிகம்; மேலும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மதித்து நடக்கும் பொறுப்பான சுற்றுலாப் பயணிகள். இதனால் எல்லாம் அங்கு சுற்றுலாப் பயணிகளால் சுற்றுச்சூழலுக்கு எவ்விதக் கேடும் ஏற்படுவதில்லை.
நம் நாட்டுக்கு வருவோம். சுற்றுலாத் தலங்கள் எங்கிலும் கூட்டம்; சப்தம்; குப்பை; நெகிழிப் புட்டிகள், பைகள்; ஒழுங்கின்மை..... மேலை நாட்டவரிடமிருந்து மதுவையும், ஆடைக் குறைப்பையும் கற்றுக்கொண்ட நாம், அவர்களிடமிருந்து பொறுப்புணர்வைக் கற்றுக்கொள்ளவில்லையே! 'ஒரே ஒரு நபராக இருந்தாலும் ஆங்கிலேயர் வரிசையில்தான் நிற்பார்' என்று ஆங்கிலேயரின் ஒழுங்கைப் பற்றிச் சொல்வதுண்டு.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிர்ந்து பேச மாட்டார்கள்; பயணச் சீட்டாகட்டும், உணவாகட்டும், வரிசையில் பொறுமையாக நின்று பெறுவார்கள். நம் மக்களைப் போல் முண்டியடித்துச் சண்டையிட்டு அசிங்கப்படுத்த மாட்டார்கள். எப்போது மக்களிடம் பொறுப்புணர்வும் நாகரிகமும் இல்லையோ, அதை மக்களிடம் கண்டிப்புடன் கொண்டு வருவது அரசுகளின் கடமை.
Esta historia es de la edición June 12, 2025 de Dinamani Tiruvallur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு
முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Tiruvallur
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Tiruvallur
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Translate
Change font size

