Intentar ORO - Gratis
தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!
Dinamani Tiruppur
|August 28, 2025
பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.
உலகின் கவனம் தற்போது இந்தியாவை நோக்கித் திரும்பி இருக்கிறது. ஒருபுறம் அமெரிக்கா தரும் புதிய வரிகளுக்கான அழுத்தம், மறுபுறம் ரஷ்யாவுடன் இருக்கும் எண்ணெய் வர்த்தகம், மற்றொருபுறம் சீனாவுடனான போட்டி.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்கா விதித்த 50% கூடுதல் வரிவிதிப்பு அமலுக்கு வருமா, இந்தியா எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது? அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியுமா, ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் தொடருமா போன்ற வினாக்களுடன் உலகம் நம்மை உற்று நோக்குகிறது.
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் ஆக. 27-ஆம் தேதிமுதல் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்? அதற்கு முன்னதாக அமெரிக்காவுடன் சுமுகமான முடிவு எட்டப்படுமா? வினாக்களோடு இந்தியர்களான நாமும் காத்திருக்கிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இந்தியா புதிய வெளியுறவுக் கொள்கையைக் கொண்டு செயல்படுகிறது. ஜவஹர்லால் நேரு காலத்தில் அணிசாராக் கொள்கை பின்பற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பன்முகக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பல கூட்டமைப்புகளிலும் இந்தியா பங்கு பெறுவது என்ற நிலைப்பாடுதான் அதற்குக் காரணம். உண்மையில் இந்தியாவின் கொள்கை பன்முகக் கூட்டணிதானா?
ஐரோப்பா, அமெரிக்க ஆதிக்கத்துக்கு இடம் கொடுத்துவிட்டது. டிரம்ப்பின் முடிவுகளால் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறது. ஆனால், இந்தியா தன்னை எந்த இடத்திலும் இறக்கிக் கொள்ளவில்லை. உலகின் வல்லரசுடன் சம நிலையில் நின்று பேச விரும்புகிறது.
எங்களுக்கான நட்பு நாடுகளை, வர்த்தகக் கூட்டாளிகளை வேறு எவரும் தீர்மானம் செய்ய முடியாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் இன்னும் சில நாள்களில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இந்தியா வந்து வெளியுறவுத் துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யப் பயணத்தை மேற்கொண்டார். பிரதமர் சீனா செல்ல இருக்கிறார்.
Esta historia es de la edición August 28, 2025 de Dinamani Tiruppur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruppur
Dinamani Tiruppur
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 mins
September 01, 2025
Dinamani Tiruppur
15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை
15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்
பிரேமலதா குற்றச்சாட்டு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size