Intentar ORO - Gratis
100-ஆவது ஆண்டில் ஒரு காந்தியப் போராளி!
Dinamani Tirunelveli
|June 16, 2025
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணனுடன் பயணித்தவர்களுள் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு வித்தியாசமான புதுமைப்பெண் போராளி.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணனுடன் பயணித்தவர்களுள் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு வித்தியாசமான புதுமைப்பெண் போராளி. அவர் திங்கள்கிழமை (ஜூன் 16) தன் 100-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்; இந்த வயதிலும் நடந்து வந்து, அகவல்பாடி கூட்டத்தில் நின்று நிதானித்து பேசும் ஆற்றலுடன் இருக்கிறார் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
சர்வோதயப் போராளியான கணவர் ஜெகந்நாதன் மறைந்துவிட்டார்; எனினும் இவரிடமிருந்து அவரைப் பிரிக்க முடியாது. இவர்கள் காந்திய களப் பணியில் இருவராகவே அறியப்பட்டவர்கள். 'கீழவெண்மணியில் என்னுடன் (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்) பணி செய்தவர்களுடன் அன்று அந்த நாளைக் கழிக்க வேண்டும். என்னை அங்கு கொண்டு விடுங்கள், அதுவே எனது விருப்பம்' என்று அங்கு செல்கிறார். அவர் இருக்கும் இடம் காந்தி கிராம ஊழியரகம் என்று அழைக்கப்படும் ஒரு பழைய ஓட்டுக் கட்டடம். காந்தி கிராமத்தில் ஒரு சிறிய ஓடைக்கு அருகில் இருக்கிறது. அந்த சிறிய கட்டடம் தியாக காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
இன்று வாழும் காந்தியர்களில் இவர் மூத்த காந்தியப் போராளி. கதர் ஆடை, தற்சார்பு, எளிய வாழ்க்கை, விளிம்பு நிலை மக்களுக்காகவே அர்ப்பணித்து இன்றும் களத்தில் இருக்கும் காந்தியர். புதுமை காந்தியர்களை உருவாக்கி களத்தில் செயல்பட வைத்து, அவர்களின் ஆத்ம பலத்தை கூட்டிக் கொண்டு பணி செய்ய இளைஞர்களுடன் பயணிக்கும் இவரது பண்பு, பாங்கு, பார்வை அனைத்தும் புதுமை.
இவரால் இந்த வயதில் எப்படி இத்தனை இளைஞர்களைக் கவர முடிகிறது என்பதுதான் பலரின் கேள்வி. அகிம்சையில் அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கை; காந்தியத்தில் தோய்ந்து வள்ளலாரின் அருட்பெரும் ஜோதியின் சக்தியை தன் இடையறாத பாடல்களால் பெற்று வருகின்ற இளைஞர்களுக்கெல்லாம் தன் வாழ்க்கையை முன்னுதாரணமாக ஆக்கி வைத்திருப்பதுதான் இவரின் தனிச் சிறப்பு.
மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து மக்களுடன் போராடி அவற்றைத் தீர்ப்பதில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியின் செயல்பாடுகள் இருந்ததால், ஓடும் நீராகவே வாழ்ந்தது எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி.
Esta historia es de la edición June 16, 2025 de Dinamani Tirunelveli.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள்
உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மக்களவை தலைவரிடம் விசாரணைக் குழு அறிக்கை
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
நீட் வினாத் தாள் கசிவு: மகாராஷ்டிரத்தில் இரு மாணவர்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இரு மாணவர்களின் இல்லங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani Tirunelveli
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதார தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.
1 min
May 20, 2026
Translate
Change font size

