Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

புதிய தலைமைக்கான கல்வி!

Dinamani Thoothukudi

|

March 29, 2025

நமக்குத் தேவையான தலைமை என்பது நிறுவனத் தலைமை அல்ல. மக்களுக்கு வழிகாட்டும் செயல்பாட்டுத் தலைமை. அந்தத் தலைமை மக்களின் மீது நம்பிக்கையும், அன்பும் கொண்டிருக்க வேண்டும். அப்படி மக்களிடம் மாறா அன்பும், நம்பிக்கையும் கொண்டு மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

லைமை என்பது ஒரு மனிதரிடம் இருக்கிற மக்களை வசீகரிக்கும் ஒருங்கிணைக்கும் குணங்கள், திறன்கள், ஆற்றல்களாகும். தலைமை என்பது அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

ஒவ்வொருவரும் தாங்கள் பொறுப்பில் இருக்கும் அமைப்பில், நிறுவனத்தில் தங்கள் குணங்களையும், திறன்களையும், ஆற்றல்களையும் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவற்றின் தாக்கங்களை அவர் செயல்படுகிற நிறுவனத்தில், அமைப்பில் நம்மால் பார்க்க இயலும்.

இந்தக் குணங்களும், திறன்களும், ஆற்றல்களும் தாமாகவே எவருக்கும் வந்துவிடாது. வலிந்து முயற்சி செய்யும் தொடர் பயிற்சிகளின் மூலமே அவற்றைப் பெற முடியும். இவை அனைத்தும் வளர்ந்தால், உயர்ந்தால் செயல்படுகின்ற இடத்தில் வியாபிப்பதும், தளர்ந்தால் தளர்வதையும் நாம் பார்த்து வருகிறோம்.

இதில் மூன்று இடத்தில் தலைமைத்துவம் என்பது பெரும் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளது. ஒன்று, அரசுத் தலைமை; இரண்டு, சமூகத் தலைமை; மூன்று, சந்தைத் தலைமை.

இந்த மூன்றில் சந்தைத் தலைமையை வளர்க்கத்தான் உலகத்தில் பெரும் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாகத்தான் இன்று சந்தையில் வளர்ந்த, மேம்பட்ட உச்சம் பெற்ற தலைமையைப் பார்க்க முடிகிறது. ஆகையால்தான், சந்தை வலுவடைந்து அரசாங்கத்தையும், சமூகத்தையும் வயப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளது.

உலகம் வியக்கக்கூடிய அளவில் தலைமைத்துவக் குணங்கள், திறன்கள், ஆற்றல்கள் வளர்த்தெடுக்கப்படுவதை சந்தையில் நாம் பார்க்கிறோம். அதற்கான தொடர் ஆய்வுத்திட்டங்கள் வகுக்கப்பட்டுபெரும் நிதி செலவு செய்து நிறைவேற்றப்பட்டு அதன் விளைவுகளைப் பதிவு செய்து புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு நல்ல அரசியலை, ஆட்சியை, நல்ல நிர்வாகத்தைக் கட்டமைக்கத் தேவையான தலைமைத்துவக் கல்வி சந்தையில் இருக்கிற தலைமைக் கல்விபோல் இருக்கிறதா என்றால், 'ஆம்' என்று கூற முடியாது.

அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் எனக் கல்வித் திட்டங்கள் இருக்கிறதே என்று பலர் எண்ணக்கூடும். இது நம் அரசியல் எது சார்ந்தது, எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். ஓர் அறம் சார்ந்த அரசியலை எப்படி கட்டமைப்பது என்பதற்கான கல்வி இல்லை.

MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Thoothukudi

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Dinamani Thoothukudi

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Thoothukudi

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Translate

Share

-
+

Change font size