Facebook Pixel மாறும் உலகில்... மாறாத போர்கள்... | Dinamani Tenkasi - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

மாறும் உலகில்... மாறாத போர்கள்...

Dinamani Tenkasi

|

July 12, 2025

மக்களும், நாடுகளும் இப்போதும் இரு அடிப்படை விதிகளைக் கொண்டு நிர்வகிக்கப்படுகின்றன. இவை 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொள்கைகள். அவை, முதலில் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிப்பது, அடுத்து அதிகாரத்தை முறையாகப் பகிர்வது மற்றும் பிற நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப இணைந்து செயல்படுவது.

உலகின் தற்கால நிகழ்வுகள் குறித்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறைமை மடிந்துவிட்டனவா? இல்லை புதிதாக ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்படவே இல்லையா? நாம் இன்னும் கற்கால உலகில்தான் இருக்கிறோமா? இல்லையென்றால் 17, 18-ஆம் நூற்றாண்டில் இருந்த பழைய நிலைக்குத் திரும்புகிறோமா? என்பவைதான் அவை.

இப்போது 5 கண்டங்களில் ஒரே நேரத்தில் சண்டை நடைபெறுவதை உலகம் அச்சத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச வர்த்தகக் கட்டமைப்பைச் சீர்குலைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட செயலால் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது.

2022, பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. 2023 அக்டோபரில் இருந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதி, ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இதுதவிர, கடந்த 30 ஆண்டுகளாக சீனா பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. 26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கார்கில் போருக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு பெரிய மோதலை நடத்தியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா பூமியைத் துளைத்து தாக்கும் குண்டுகளை வீசியுள்ளது.

ஐரோப்பாவில் அச்சு இயந்திரத்தின் வருகை அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவை மனித நேய இயக்கங்களுக்கு வலுவூட்டின. அந்தக் காலகட்டத்தில் எழுந்த நவீன சிந்தனைகளைப் போன்ற எழுச்சி இப்போதும் இந்த நேரத்திலும் நமக்கு அவசியமாகிறது.

1648-ஆம் ஆண்டு வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தம் மூலம் ஐரோப்பாவில் நீடித்து வந்த '30 ஆண்டு போர்' மற்றும் '80 ஆண்டு போர்' ஆகியவை முடிவுக்கு வந்தன. இதன்பிறகு, 17-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிரான்ஸ் தலைமை அமைச்சரான கார்டினல் டி ரிச்செலியூ ஒவ்வொரு நாடும் அதனதன் தேச நலன்களுக்காக மட்டும் செயல்படுவது என்ற கருத்தை முன்வைத்தார். இது மோதல்களைத் தவிர்க்க வழிவகுத்ததுடன், அதிகாரச் சமநிலை, நாடுகள் இடையே ஒத்துழைப்பு, கூட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்க முதல்படியாக அமைந்தது.

பின்னர், இது டச்சு நாட்டைச் சேர்ந்த மனிதநேய ஆர்வலரும் பல்துறை வல்லுநருமான ஹ்யூகோ க்ரோடியஸால் புதிய கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டது.

MÁS HISTORIAS DE Dinamani Tenkasi

Dinamani Tenkasi

98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tenkasi

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Tenkasi

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tenkasi

கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tenkasi

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tenkasi

திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tenkasi

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tenkasi

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Translate

Share

-
+

Change font size