Intentar ORO - Gratis
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
Dinamani Salem
|October 12, 2025
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
பனை மரத்தின் பாதுகாப்பு இப்போது எப்படி இருக்கிறது?
தமிழ்நாட்டு மாநில மரம் பனை. இதற்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக பனை மரம் வெட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசு பனை மரத்தைப் பாதுகாக்க ஓர் உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு அடிப்படையில், இனி யாரும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் பனை மரத்தை வெட்ட முடியாது. இது போன்ற உத்தரவு புதுவையிலும் பிறப்பிக்க வேண்டும். இப்போது பனைக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது.பனை மரம் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரிகிறதே?
பனை மரம் ஏறுவோர்தான் பனை மரத்தைப் பாதுகாத்து வந்தனர். பனை ஓலைகளைக் கழித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாத நிலையில், பனை மரம் ஏறுவோர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். பழக்கம் இருந்தால் மட்டும்தான் பனை மரம் ஏற முடியும். டாஸ்மாக் வந்து விட்டதால் இப்போது பனை மரம் இந்தப் பயன்பாட்டுக்கு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது.எத்தனை ஆண்டாக பனை விதைகளை நட்டு வருகிறீர்கள்?
இளைஞர்கள் ஒன்று திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்கும் எண்ணம் கொண்டது. அதைப் போன்றதுதான் பனையின் பாரம்பரியத்தை மீட்பதும். அதற்காகத்தான் 2015 முதல் பனை விதைகளை நட்டு வருகிறேன். கடலோரப் பகுதிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள், சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 4.5 லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பனைகள் பிழைத்துக் கொண்டன. இப்போது அவை ஓரடி, இரண்டு, மூன்றடி வரை வளர்ந்துள்ளன.Esta historia es de la edición October 12, 2025 de Dinamani Salem.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Salem
Dinamani Salem
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை
உலகின் மிக முக்கியமான எண்ம (டிஜிட்டல்) மாற்றங்களில் ஒன்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
3 mins
June 18, 2026
Dinamani Salem
பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாடு நிறைவு
பிரான்ஸின் ஏவியான் நகரில் நடைபெற்ற உலகின் முன்னணி தொழில்வள நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 உச்சி மாநாடு புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.
1 min
June 18, 2026
Dinamani Salem
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுடன் இரு தரப்பு பேச்சு
கேரள முதல்வர் வி.டி. சதீசன்
1 mins
June 18, 2026
Dinamani Salem
ஐ.நா. பொதுச் செயலாளர் ஹைட்டி பயணம்
ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குட்டெரெஸ் (படம்) அந்நாட்டுக்குப் பயணித்தார்.
1 min
June 18, 2026
Dinamani Salem
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Salem
13 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்பட 13 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 18) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 18, 2026
Dinamani Salem
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani Salem
சென்னை பிஎம்டபிள்யூ ஆலைத் தயாரிப்பான புதிய 'மினி கன்ட்ரிமேன் சி' கார் அறிமுகம்
உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, சென்னை ஆலையில் முழுமையாக ஒருங்கிணைக் கப்பட்ட (அசெம்பிள்) 'மினி கன்ட்ரிமேன் சி' எனும் புதிய காரை அறிமுகப்படுத்தியது.
1 min
June 18, 2026
Dinamani Salem
'ஏ' அணிகள் ஒருநாள் தொடர்: இறுதி ஆட்டத்தில் இந்தியா
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில், இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Salem
தீயணைப்பு ஆணையத் தலைவர், உறுப்பினர்கள் ராஜிநாமா
தமிழக தீயணைப்பு ஆணையத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1 min
June 18, 2026
Translate
Change font size

